இரவிலும் தொடரும் மின்வெட்டால் தூக்கமின்றித் தவிக்கும் பொதுமக்கள்..!

People suffering from sleepless nights due to power cuts in pudukkottai

புதுக்கோட்டை மாவட்டத்தில் மாலை 5 மணிக்குப் பிறகு அரை மணி நேரத்திற்கு ஒரு முறை, ஒரு மணி நேரம் மின்வெட்டு தொடர்ந்து நீடித்து வருவதால், நகரங்கள் முதல் கிராமங்கள் வரை பொதுமக்கள் தூக்கமின்றித்தவித்து வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாக விவசாயத்திற்கான நீர்மூழ்கி மோட்டார்களை இயக்க மும்முனை மின்சாரம் சில மணி நேரங்களே கிடைத்துவரும் நிலையில், தற்போது அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வீடுகளுக்குத்தேவையான மின்சாரமும் துண்டிக்கப்பட்டு வருவதால், பெரும் வேதனையில் இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பலரும் மின்சார வாரியத்திற்கு எதிராக கருத்துகளைத்தெரிவித்து வருகின்றனர்.

pudukkottai
இதையும் படியுங்கள்
Subscribe