Skip to main content

மக்கள் வாக்களிக்க மறுப்பு - வெறிச்சோடிய வாக்குச்சாவடி!!

Published on 06/10/2021 | Edited on 06/10/2021

 

க

 

வேலூர் மாவட்டம், காட்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்டது அம்முண்டி ஊராட்சி. இங்கு மொத்தம் 2,049 வாக்குகள் உள்ளன. இடஒதுக்கீட்டில் இந்த ஊராட்சி மன்றத் தலைவர் பதவி பட்டியலின பெண் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஊராட்சியில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த பெண்கள் இருவர் மட்டுமே உள்ளனர். அவர்களும் கலப்பு திருமணம் செய்தவர்கள். பட்டியலின வாக்கு அதிகம் இல்லாத அம்முண்டி ஊராட்சி மன்றத் தலைவர் பதவி பட்டியலின பெண்கள் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், ஊராட்சித் தலைவர் பதவிக்கு யாரும் போட்டியிட முடியாத நிலை உருவாகியுள்ளது. எனவே, அம்முண்டி ஊராட்சி மன்றத் தலைவர் பதவியை பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கக் கோரி அந்த ஊராட்சி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

 

இதற்கு அரசுத்தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் ஊராட்சி பொதுமக்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டதுடன், அம்முண்டி ஊராட்சி மன்றத் தலைவர், ஊராட்சியிலுள்ள 9 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் ஒருவர்கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. உள்ளாட்சித் தேர்தலின்போது மாவட்ட ஊராட்சிக் குழு வார்டு உறுப்பினர், ஒன்றியக் குழு வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் இந்த ஊராட்சி மக்கள் யாரும் வாக்களிக்கப் போவதில்லை என்றும் தெரிவித்திருந்தனர். ஊரக உள்ளாட்சித் தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு காட்பாடி ஒன்றியத்தில் அக்டோபர் 6 ஆம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கின. அம்முண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

 

இந்த வாக்குச்சாவடிகளில் அம்முண்டி ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் யாரும் வாக்களிக்கவில்லை. இதனால்  வாக்குச்சாவடிகள் வெறிச்சோடி காணப்பட்டது. திருவலம் போலீசார் கிராம மக்களிடம் வாக்களிக்கவேண்டுமெனப்  பேச்சுவார்த்தை நடத்தினர். வாக்களிக்க யாரும் முன்வரவில்லை. தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை வாக்களிக்க மாட்டோம் எனப் பொதுமக்கள் தெரிவித்தனர்.  அந்த ஊராட்சிப் பகுதியில் உள்ள வீடுகள், கடைகள் முன்பாக கருப்புக்கொடி ஏற்றி பொதுமக்கள் தங்கள் எதிர்ப்பையும் தெரிவித்திருந்தனர். பொதுமக்கள் கட்டியிருந்த கருப்புக் கொடிகளை போலீசார் அகற்றினர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

தேர்தலுக்கு பின் சென்னை திரும்பும் மக்கள்; திணறும் பரனூர்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
People returning to Chennai after elections; The stifling Paranur toll plaza

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது.

ஏற்கனவே சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு இலட்சக்கணக்கானோர் வாக்களிப்பதற்காக சென்றிருந்தனர். இதன் காரணமாக ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டிருந்தது. தொடர்ந்து வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் கூட்டநெரிசல் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் தற்போது மூன்று நாள் விடுமுறை முடிந்து சென்னைக்கு அதிகப்படியான மக்கள் திரும்புவதால் பல்வேறு இடங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை அடுத்துள்ள பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது.