Advertisment

எங்கள் கிராமத்தை கள்ளக்குறிச்சியோடு இணைக்கக் கூடாது - கருப்புக்கொடி ஏந்தி மக்கள் போராட்டம்

People Protest

Advertisment

தமிழக முதல்வர் கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை அறிவித்தார் தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

இந்த நிலையில் விழுப்புரம் அருகே உள்ள திருவெண்ணைநல்லூர் திருநாவலூர் முகையூர் ஆகிய பகுதிகளை விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்க வேண்டியும் --- கள்ளக்குறிச்சியுடன் சேர்க்க கூடாது என கூறியும் மேல்மங்கலம் கிராமத்தில் பொதுமக்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் செய்தனர்.

விழுப்புரம் செல்ல 10 நிமிடமும், 11 கிலோ மீட்டர் தூரமும் உள்ளது. கள்ளக்குறிச்சி 100 கி.மீ. தூரத்தில் உள்ளது. கள்ளக்குறிச்சிக்கு சென்றுவர ஒரு நாள் ஆகிவிடும் என்றும், வளர்ச்சி திட்ட பணிகள் சரிவர கிடைக்காது என கூறி போராட்டத்தில் ஈடுபட்டள்ள பொதுமக்கள் கண்டனங்களை தெரிவித்தனர்.

District kallakurichi people protest villupuram
இதையும் படியுங்கள்
Subscribe