Skip to main content

'சவுடு மணல் என்ற பேருல தாதுமணல் எடுக்குறாங்க...' குவாரியை முற்றுகையிட்டு போராட்டம்!!

Published on 28/01/2020 | Edited on 28/01/2020

சவுடு மணல் என்ற பெயரில் கிராமத்தின் நீர், நில வளம் சுரண்டபடுகிறது என பொதுமக்கள் மணல் குவாரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சிலம்பிமங்கலம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட கிராம பகுதியில் அதிக அளவு சவுடு மணல் உள்ளது. இதனால் இந்த பகுதியில் மணிலா உள்ளிட்ட மானவரி பயிர்கள் பயிர் செய்யப்படுகிறது. இந்த நிலையில் சிலர் அரசியல் மற்றும் மாவட்ட அரசு அதிகாரிகள் துணையுடன் சவுடு மணல் குவாரி என்ற பெயரில் அனுமதி பெற்று அனுமதித்த அளவைவிட 25 அடி ஆழத்திற்கு மேல் மணலை எடுத்து வெளிமாவட்டங்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள்.

 

people protest against sand


இதற்கு அந்த பகுதியை சார்ந்த கிராம மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்தநிலையில் கடந்த இரு மாதத்திற்கு முன் மணல் குவாரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். அப்போது மணல் எடுக்ககூடாது என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தடைவிதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த ஒரு வார காலமாக அதே இடத்தில் மணல் எடுத்து விற்பனை நடைபெறுகிறது. ஒரு நாளைக்கு 200-க்கும் மேற்பட்ட லாரிகள் வந்து மணல் அள்ளி செல்வதாக குற்றம் சாட்டப்படுகிறது.

 

people protest against sand


இந்த பகுதியில் மணல் தொடர்ந்து எடுப்பதால் மிக குறைந்த தூரத்தில் உள்ள நிலத்தடி நீர் மட்டம் கீழே செல்கிறது. இதே இடத்தில் தாதுமணல் உள்ளது. அதனையும் சவுடு மணல் என அரசை ஏமாற்றி எடுத்து செல்கிறார்கள். 6 அடி ஆழத்திற்கு மணல் எடுக்க அரசு அனுமதித்துள்ள நிலையில் 30 அடி வரை பள்ளம் தோண்டி மணலை எடுத்துவிட்டு அப்படியே மாற்று இடத்திற்கு சென்று விடுகிறார்கள். இதனால் அந்த பள்ளங்களில் மனித மற்றும் கால்நடைகளுக்கு உயிர் இழப்பு ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளதாக அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கூறுகிறார்.  

எனவே அரசு பொதுமக்கள் நலன் கருதி இந்த மணல் குவாரியை தடைசெய்ய வேண்டும் என்று மணல்குவாரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். இதனால் குவாரியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர்  கிராமத்தின் கனிம வளத்தையும், நிலத்தடி நீர் மட்டத்தையும் பாதுகாக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மீறி குவாரி செயல்பட்டால் இந்த பகுதியில் அனைத்து மக்களையும் ஒருங்கிணைத்து மிகபெரிய சாலைமறியல் போராட்டத்தை நடத்துவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மணல் கொள்ளையரிடம் பணம் கேட்டு கறாராகப் பேசிய போலீஸ்; பரபரப்பைக் கிளப்பிய ஆடியோ 

Published on 03/07/2023 | Edited on 03/07/2023

 

police demanded money from the sand robber and negotiated a deal

 

மணல் கொள்ளையர்களிடம் பணம் கேட்கும் போலீஸின் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகர மற்றும் கிராம ,உமராபாத் உள்ளிட்ட  காவல் நிலைய எல்லைகளுக்குட்பட்ட  பகுதிகளில் இரவு நேரங்களில் மணல் கொள்ளையர்கள் பாலாற்றில் மணல் கடத்தி வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது . இந்நிலையில் ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வரும் ஆம்பூர் அடுத்த கட்டவாரபல்லி  பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவர் மணல் கொள்ளையரிடம் பீட் பணம் இன்னும் கொடுக்கவில்லையாமே? ஏன் தரல? உடனே கொண்டு வந்து தா என தொடர்ந்து (மணல் கொள்ளையரிடம்) போன் செய்து பீட் பணம் குறைவாக கொடுத்தால் இன்ஸ்பெக்டர் மொத்த வண்டியையும் நிறுத்தி விடுவார் என தலைமை காவலர் சீனிவாசன் கறாராக பேசும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி காவல்துறையினர்  மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது.

 

இதுபோன்று மணல் கடத்தலுக்கு உடந்தையாகச் செயல்படும் தலைமை காவலர் மீது துறை சார்ந்த உயர் அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி ஆல்பட்ர் ஜான் தலைமை காவலரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்  

 

 

Next Story

“மணல் உன் அப்பன் வீட்டு சொத்தா? முடிஞ்சத பார்த்துக்கோ” - முன்னாள் அதிமுக அமைச்சரிடம் வாக்குவாதம்!

Published on 06/05/2023 | Edited on 06/05/2023

 

Argument with former AIADMK minister, stealing sand gang

 

ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டாரத்தில் மணல் திருட்டு நடப்பதும், அதை  வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்புவதும் வழக்கமாக நடந்து வருகிறது. இங்கு மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் பந்தப்பாறை பகுதியில் அரசு அனுமதியின்றி சட்ட விரோதமாக மணல் அள்ளப்பட்டு வாகனங்களில் மணல் கடத்துவது தொடர்ந்து நடக்கிறது. அதனால் 24 மணி நேரமும் நடக்கின்ற மணல் கொள்ளையை அதிகாரிகள் ஏன் தடுக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது.  

 

வழக்கம்போல ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியகுளம் கண்மாயில் அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டி ஜேசிபி இயந்திரங்கள் மூலம் மணல் அள்ளி டிராக்டர்களில் கடத்துவது நடந்து கொண்டிருந்தது. இந்நிலையில் திடீரென்று அங்கு வந்த முன்னாள் அதிமுக அமைச்சர் இன்பத்தமிழன், அதிமுக மாணவரணி செயலாளர் பெருமாள் பிச்சை உள்ளிட்டோர் விதிமீறலான மணல் கடத்தலைத் தடுக்க முயன்றனர். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டது. டிராக்டரை மறித்த இன்பத்தமிழன் “இதை வீடியோ எடுப்பா..” என்று கூற, மணல் கடத்தியவர்களோ, “இது உன் அப்பன் வீட்டு சொத்தா?” என்று எகிற, அந்த இடம் ரசாபாசமானது. “அப்படித்தான் மணல் அள்ளுவோம். உன்னால  முடிஞ்சத பார்த்துக்கோ..” என்று சத்தம் போட்ட மணல் கடத்தல் ஆசாமி ஒருவர், பெருமாள் பிச்சையை முதுகில் அடித்து அங்கிருந்து நெட்டித்தள்ள, “என் கூட வந்த ஆள் மேல கை வைக்காத..” என்று இன்பத்தமிழன் எச்சரிக்க, தொடர்ந்து அமளிதுமளியானது. 

 

Argument with former AIADMK minister, stealing sand gang

 

ஒருகட்டத்தில் வழியில் சேர் போட்டு அமர்ந்து டிராக்டரை மறித்த இன்பத்தமிழன் மீது டிராக்டரை ஏற்றி விடுவார்களோ என்ற பரபரப்பு நிலவியது. அதனால், “சரி.. சரி.. கோர்ட்ல பார்த்துக்குவோம்..” என்று சவால் விட்டு அந்த இடத்திலிருந்து வெளியேற வேண்டிய நிலை அதிமுகவினருக்கு ஏற்பட்டது. லோக்கல் ஆளும் கட்சியினரோ, “தடுக்கப் போன அதிமுகவினர் கனிமவளச் சுரண்டலுக்கு எதிரானவர்களா? நாட்டு நலனில் அக்கறை கொண்ட  நல்லவர்களா? எதிர்ப்பு என்ற பெயரில் ஸ்டண்ட் அடித்து ஏதாவது தேறாதா? மாமூல் கிடைக்காதா? என்ற சுயநலத்தோடு போனார்கள். அதனால்தான் அதிமுகவினரின் உள்நோக்கத்தை அறிந்த மணல் கடத்தல் ஆசாமிகள், அவர்களை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.” என்று விமர்சனம் செய்கிறார்கள்.

 

உயர்நீதிமன்றம் பல தடவை எச்சரித்து உத்தரவிட்டும் தமிழகத்தில் விதிமீறலாக மணல் கடத்துவது பல மாவட்டங்களிலும் தொடர்ந்து  நடக்கிறது.