கரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 03 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள சூழலில் மக்கள் யாரும் அத்தியாவசியத் தேவையின்றி வெளியில் வருவதைத் தவிர்க்க வேண்டும் எனக் காவல்துறை மற்றும் அரசு சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. மேலும், ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறது. எனினும், சென்னையில் நிலவும் அதிகப்படியான வெப்பத்தின் காரணமாகச் சென்னை, சாந்தோம் கடற்கரை பகுதியில் வசிக்கும் சிறுவர்கள் ஊரடங்கைக் கவனத்தில் கொள்ளாமல் கடலில்இறங்கி உல்லாசமாகக் குளித்து மகிழ்ந்தனர்.