வில்லிவாக்கத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 18 வயதுக்கு மேற்பட்டவர்கள்..! (படங்கள்)

நாடு முழுவதும் கரோனாவின் தாக்கம் கடுமையாக மக்களைத் தாக்கிவருகிறது. அதனால் பல மாநிலங்களிலும் முழு ஊரடங்கானது அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்திலும் கரோனா பாதிப்பைக் கருத்தில்கொண்டு சில தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கானது அமலில் உள்ளது.

கரோனா இரண்டாம் அலையில் இருந்து மக்கள் தங்களைத் தற்காத்துக்கொள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு தமிழக அரசு மற்றும் மருத்துவர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். அந்த வகையில் தமிழக அரசின் அறிவுரைப்படி 18 வயதிற்கு மேற்பட்டோர்கள் அனைவரும் விரைவாக சுய விருப்பத்தோடு தடுப்பூசி செலுத்திக்கொள்ள தீவிர நடவடிக்கைகள் எடுத்துவருகின்றனர். அந்த வகையில் இன்று (20.05.2021) வில்லிவாக்கத்தில் 18 வயதிற்கு மேற்பட்டோர்க்கு தடுப்பூசி போடப்பட்டது.

Chennai coronavirus vaccine villivakkam
இதையும் படியுங்கள்
Subscribe