Skip to main content

பிள்ளை பிடிப்பவர் என எண்ணி வடஇந்திய வாலிபர் அடித்துக் கொலை!

Published on 30/04/2018 | Edited on 30/04/2018

பிள்ளை பிடிப்பவர் என தவறாக நினைத்து வடமாநில இளைஞரை பொதுமக்கள் அடித்துக் கொலைசெய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

North indian

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகிலுள்ளது பரசுராமம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களாக வட இந்தியாவில் இருந்து வீடுகளில் திருட்டு வேலைகளில் ஈடுபடும் கும்பல் சுற்றித்திரிவதாகவும், அவர்கள் குழந்தைக் கடத்திலிலும் ஈடுபடுகிறார்கள் என்றும் ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியது. இந்த செய்தியை அடுத்து அந்த கிராமத்தில் பொதுமக்கள் சிலர் கண்காணிப்பு வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.

 

இந்நிலையில், நேற்று இரவு 30 வயதுமிக்க வட இந்திய வாலிபர் ஒருவர் பரசுராமம்பட்டியில் சுற்றித்திரிவதைக் கண்ட சிலர், அவரை விரட்டி கட்டை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த வாலிபர் இரத்தவெள்ளத்தில் தவித்துள்ளார். தகவலறிந்து வந்த காவல்துறையினர் அந்த வாலிபரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த நிலையில், அவர் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பகலவன், இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் மோசமான குற்றம். அவர்கள் காவல்துறையிடம் தகவலளித்து, அந்த இளைஞரை ஒப்படைத்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். முதற்கட்ட விசாரணையில் அந்த இளைஞர் ரயிலில் வந்து குடியாத்தத்தில் இறங்கி, வழிதெரியாமல் சுற்றித்திரிந்திருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது. ஆனால், அந்த இளைஞர் யார், எங்கிருந்து வந்தார் என்ற தகவல்கள் கிடைக்கவில்லை. 


ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த ஆண்டு முகமது நயீம் எனும் இளைஞர் இதே காரணத்தால் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதேபோல், கடந்த சில தினங்களுக்கு முன்னர் சதாசிவம் எனும் 19 வயது வாலிபரும் இதேபோன்ற காரணத்தால் கொல்லப்பட்டார். சட்டத்தின் முன் குற்றம் செய்தவர், சந்தேகத்திற்கு இடமானவரை ஒப்படைக்காமல், விபரீத நடவடிக்கைகளில் ஈடுபடுவது மிகவும் தவறானது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சேலத்தில் பட்டப்பகலில் 3 வயது குழந்தை கடத்தல்... சிலமணி நேரத்தில் மீட்பு

Published on 22/05/2019 | Edited on 22/05/2019

சேலத்தில் 3 வயது ஆண் குழந்தை காணாமல் போன நிலையில் நடுரோட்டில் விடப்பட்ட ஆண் குழந்தையை போலீசார் மீட்டனர்.

The kidnapped 3 year old child in Salem ...

 

சேலம் சத்திரத்தை சேர்ந்தவர் பாலாஜி. அவருக்கு 3 வயதில் யோகேஸ்வரன் என்ற ஆண் குழந்தை உள்ளது. இன்று காலை வீட்டிற்கு அருகில் விளையாடி கொண்டிருந்த குழந்தை யோகேஷ் காணாமல் போனதை அடுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் சேர்ந்து தேடியும் கிடைக்கவில்லை. இதனால் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

 

The kidnapped 3 year old child in Salem ...

 

 

The kidnapped 3 year old child in Salem ...

 

இந்தபுகாரின் அடிப்படையில் அந்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சியை சோதித்தபோது ஸ்கூட்டியில் வந்த இரண்டு பெண்கள் குழந்தையை கடத்தி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து மூன்று வயது மதிக்கத்தக்க குழந்தை சேலத்தான்பட்டியில் நடுரோட்டில் விட்டுவிட்டு சென்றதால் அழுந்து கொண்டிருப்பதாக தகவல் வர போலீசார் சென்று விசாரித்ததில் அந்த குழந்தை காணாமல் போன சத்திரத்தை சேர்ந்த பாலாஜியின்  குழந்தை யோகேஷ் என தெரியவந்தது. இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் யார் அந்த பெண்கள் எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

 

Next Story

சாலையில் கட்டைபையில் கிடந்த பெண் குழந்தை மீட்பு!!

Published on 12/01/2019 | Edited on 12/01/2019

 

baby

 

திருச்சி கே.கே.நகர் காஜாமலை முஸ்லீம் 2 வது தெருவில் கல்லூரி பேராசிரியர் ஒரு வீட்டின் முன்பு கட்டைபையில் பிறந்து ஒருநாளான பெண் குழந்தை ஒன்றை ரோட்டின் ஓரத்தில் போட்டுச்சென்றுள்ளனர்,அவ்வழியாக காலை 05.30 மணிக்கு சென்ற காஜாமலை 2வது முஸ்லீம் தெருவில் வசித்து வரும் அப்துல் கபூர் என்பவர் மகன் ஷாஜஹான் 47 என்பவரின் தகவலின் பேரில் கே.கே.நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையை மீட்டு கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள சேவை குழந்தைகள் மையத்தில் ஒப்படைத்தனர்.. பின்னர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.