தமிழகம் புதுச்சேரி கடற்கரை பகுதியில் சமூக வலைத்தளத்தின் மூலம் ஒன்றுகூடிய மக்கள் 8 வயது சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை எதிர்த்து போராட்டம் நடத்தினர்.
இன்று காலை புதுச்சேரி கடற்கரையை ஒட்டிய காந்தி சிலை அருகே தீடீரென சமூக வலைதளத்தின் மூலம் ஒன்றுகூடிய மக்கள் மற்றும்மாணவர்கள்,மாணவிகள் என 200 க்கும் மேற்பட்டோர் காஷ்மீரில் வன்கொடுமை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்ட 8 வயது சிறுமிக்கு நியாயம் வேண்டும் என பதாகைகள் மற்றும் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர் மேலும் இதுபோன்று பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்.