தமிழகம் முழுவதும் கரோனாவின் பரவல் அதிகரித்துவருகிறது. மருத்துவமனைகளிலும் வீடுகளிலும் கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்றுவருகின்றனர். கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்துகள் பரிந்துரைக்கப்படுகிறது. கீழ்ப்பாக்கத்தில் கொடுக்கப்பட்ட ரெம்டெசிவிர் மருந்து, இன்றுமுதல் (14.05.2021) நேரு ஸ்டேடியத்திற்கு மாற்றப்பட்டுள்ளதால், மருந்து வாங்க மக்கள் வரிசையில் காத்திருக்கின்றனர்.