அதனால் அடுத்த சில நிமிடங்களில் மாவட்டம் முழுவதும் உயிர்மரங்களை வெட்டிதாக பலர் மீது வழக்கு பதிவானது. அமைச்சரின் இந்த செயலைப் பார்த்த பொதுமக்கள், மரங்களின் ஆர்வலர்கள் புயலில் தப்பிய மரங்கள் இனி பிழைத்துக் கொள்ளும் என்று நினைத்தனர்.
புயல் பாதித்து ஒரு வருடம் நினைவு தினம் முடிந்து 10 நாட்கள் கூட ஆகவில்லை, உயிர் மரங்களை வெட்டினால் வழக்கு போடச் சொன்ன அமைச்சர் விஜயபாஸ்கரின் தொகுதியில் உள்ள தினசரி அவர் வீட்டுக்குச் சென்று வரும் அன்னவாசல் கடைவீதியில் கடந்த 50 வருடங்களாக சாலை ஓரமாக நின்று பல லட்சம் பொதுமக்களுக்கு நிழல் கொடுத்த புளிய மரத்தை சாலைக்கு பாதி்ப்பாக உள்ளது என்று சிரு சில மணி நேரத்தில் வெட்டி எடுத்துவிட்டனர்.
மரத்தை வெட்டத் தொடங்கியதுமே அப்பகுதி பொதுமக்கள் மரத்தை வெட்ட வேண்டாம். பொதுமக்களுக்கு உதவியாக இருந்த மரம், போக்குவரத்துக்கும் பாதிப்பு இல்லாத உயிர் மரம் என்று பலரும் கெஞ்சினார்கள். அவர்களின் கெஞ்சல் மரம் வெட்டியவர்களின் காதுகளில் கேட்கவில்லை. வேகமாக வெட்டி அகற்றிவிட்டனர்.
அந்த மரத்தின் நிழலை அனுபவித்தவர்கள், மரத்தை வெட்டவேண்டாம் என்று கெஞ்சிய பொதுமக்கள், வெட்டி எடுக்கப்பட்ட மரத்தின் அடியில் மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்திய நெகிழ்ச்சி சம்பவம் அங்கு நடந்தது.
இன்றும் பல சாலைகளில், மரங்கள் போக்குவரத்துக்கு இடையூறாகவும், ஆபத்தை ஏற்படுத்தும் விதமாகவும் அச்சுறுத்திக் கொண்டு நிற்கிறது. ஏனோ அந்த மரங்களை வெட்டி அகற்ற மனமில்லை. உயிர் மரங்களை வெட்டி எடுக்கிறார்கள்.
மாணவர்களும், இளைஞர்களும், தன்னார்வ அமைப்பினலும் லட்ச லட்சமாக, மரக்கன்றுகளை நட்டு புயலில் இழந்ததை விட பல மடங்கு மரங்களை உருவாக்குவோம் என்று சொந்தக் காசில் மரக்கன்றுகளை நட்டு வரும் நிலையில் உயிர் மரத்தை வெட்டி அகற்றியது சரியா என்ற கேள்வி எழுந்துள்ளது.