Skip to main content

தண்ணீர் திறந்துவிட நிரந்தர அரசாணை கோரி கடையடைப்பு போராட்டம்...

Published on 20/11/2019 | Edited on 20/11/2019

58ம் கால்வாயில் தண்ணீர் திறந்துவிட நிரந்தர அரசாணை கோரி விவசாயிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர். மேலும், கலைஞர் கொண்டு வந்த திட்டம் என்பதால் அதிமுக அரசு வஞ்சிப்பதாக குற்றச்சாட்டு வைக்கின்றனர்.
 

people demand water to be opened


58ம் கால்வாயில் தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்ட விவசாயிகள் இன்று ஒருநாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே விருவீடு பகுதியில் 58 கால்வாய் பாசன விவசாயிகள் கால்வாயில் தண்ணீர் திறந்துவிட வேண்டியும் நிரந்தர அரசாணை வெளியிட வலியுறுத்தியும் ஒருநாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் விருவீடு பகுதி கிராமங்கள் முழுவதும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டது. விவசாயிகள் சாலையில் திரண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 

people demand water to be opened


இது குறித்து அப்பகுதியை சேர்ந்த திமுக விவசாயி சக்திவேல் கூறும்போது, "1996 ஆம் ஆண்டின் போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்த தலைவர் கலைஞர் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்த வல்லரசின் கோரிக்கையை ஏற்று 58 கால்வாய் திட்டத்தை கொண்டு வந்தார். ஆசியாவின் மிக நீளமான தொங்கு பாலமாக கருதப்படும் 58ம் கால்வாயை கட்டி முடித்து சாதனை படைத்தார். 

கலைஞர் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டம் என்பதாலேயே 58ம் கால்வாயில் தண்ணீர் திறந்து விடாமல் அதிமுக அரசு விவசாயிகளை வஞ்சித்து வண்ணமிருக்கிறது. விவசாயிகளின் நீண்ட போராட்டத்துக்கு இடையே கடந்த ஆண்டு கால்வாயில் வெள்ளோட்டம் விடப்பட்டது. தற்போது, விவசாயிகள் தண்ணீர் திறந்துவிட நிரந்தர அரசாணை வேண்டும் என போராட்டத்தில் ஈடுபகின்றனர்" என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

'தண்ணிக்காக நாங்க எங்கே போவோம்'-காலி குடத்துடன் மக்கள் போராட்டம்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
'Where shall we go for water'-people protest with empty jugs

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் குடிநீர் வராததால் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள கீரனூர் கிராம மக்கள் இரண்டு வருடமாகவே தண்ணீர் வரவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். 'கடந்த ஆறு மாதமாக தண்ணீர் இல்லாமல் அவதிப்படுவதாகவும் தெரிவித்தனர். ஒரு குடும்பத்திற்கு இரண்டு குடம் தண்ணீர் மட்டும் தான் கிடைக்கிறது. எங்கள் ஊரில் மின்சார வசதி இல்லை, ரோடு வசதி இல்லை இது தொடர்பாக பஞ்சாயத்தில் உள்ளவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேன் என்கிறார்கள். நாங்கள் என்ன செய்வது. தண்ணிக்காக நாங்கள் எங்கே போவோம்' என காலி  குடங்களுடன் சாலையில் நின்றபடி தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.