Skip to main content

வீடு புகுந்து தாக்குதல் நடத்திய மர்ம கும்பல்; நடவடிக்கை எடுக்காத காவல்துறை

Published on 21/11/2022 | Edited on 21/11/2022

 

people complaints that police didn't take action

 

நாகை அருகே தென்மருதூரில் வீடு புகுந்து தாக்குதல் நடத்திய மர்ம கும்பல் மீது வலிவலம் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

 

நாகை மாவட்டம், கீழ்வேளூர் அடுத்துள்ள தென்மருதூரைச் சேர்ந்தவர் ஜெயவேல். கடந்த சனிக்கிழமை மதியம் 20 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரது வீடுபுகுந்து கொடூரமாகத் தாக்குதல் நடத்தி டிராக்டரை எடுத்துச் சென்றுள்ளனர்.

 

இச்சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த ஜெயவேலுவின் உறவினர்களும், பொதுமக்களும் வலிவலம் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளனர். ஆனால், அந்தப் புகாரின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆத்திரமடைந்த ஜெயவேலுவின் உறவினர்களும், அவரது கிராமத்தைச் சேர்ந்தவர்களும் ஒன்றுதிரண்டுவந்து கீழ்வேளூர் - கச்சனம் பிரதான சாலையை மறித்து நியாயம் கேட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக வலிவலம் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் செயல்படுவதாகக் கூறி அவர்களைக் கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். அதோடு புகாரைப் பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் கட்டப்பஞ்சாயத்து பேசுவதாகவும், குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் முழக்கமிட்டனர். 

 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கீழ்வேளூர் காவல்நிலைய ஆய்வாளர் தியாகராஜன், வந்த வேகத்திலேயே போராட்டக்காரர்களிடம், ‘புகார் கொடுத்தது இருக்கட்டும். யாரக் கேட்டு ரோட்ட மறிச்சீங்க. ரோட்டுல உட்காந்து எதுக்கு பப்ளிக்க மறிச்சீங்க. அடிச்சி தூக்கிப்போட்டுடுவேன்’ என மிரட்ட, அங்கிருந்த பெண் ஒருவர், ‘அடிச்சிக் கொல்லுங்க; நியாயம் கேட்டதுக்கு அடிச்சிக் கொல்லுங்க’ என இன்ஸ்பெக்டர் தியாகராஜனின் காலைப் பிடித்துக்கொண்டி தரையில் உருண்டு புரண்டார். உடன்பாடு எட்டப்படாத நிலையில், போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 

 

சாலைமறியல் போராட்டத்தால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் வரிசை கட்டியதால் பரபரப்பு அதிகமானது. அதன்பிறகு காவல்துறையினர் போராட்டக்காரர்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக உறுதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் தற்காலிகமாகப் போராட்டத்தைக் கைவிட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.