ADVERTISEMENT
ADVERTISEMENT
கார்த்திகை அமாவாசையையொட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் திரளான பக்தர்கள் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.
12 ஜோதிர்லிங்க தளங்களில் ஒன்றான ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு நாள்தோறும் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். இன்று (04/12/2021) கார்த்திகை அமாவாசை என்பதால் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடிய பக்தர்கள், படித்துறையில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்தனர். அதைத் தொடர்ந்து, கோயிலுக்குச் சென்று ராமநாதசுவாமியையும் வழிபட்டனர்.
Show comments