Skip to main content

அரியலூர் மாவட்ட மக்களின் தலையெழுத்து இது தானா? 15 கேள்விகளை எழுப்பும் விபத்து விழிப்புணர்வு இயக்கம்

Published on 08/02/2020 | Edited on 08/02/2020

 

விபத்துகள் அடிக்கடி ஏற்பட்டு உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அரியலூர் மாவட்ட மக்களின் தலையெழுத்து இது தானா? என்ற தலைப்பில், 15 கேள்விகளை எழுப்பி மாவட்ட நிர்வாகம் பதில் அளிக்க வேண்டும் என்று விபத்து விழிப்புணர்வு இயக்கம் கேட்டுக்கொண்டுள்ளது. 

 

அதில், ஐயா எங்க உயிருக்கு உத்தரவாதம் உண்டா? சாமானியர்களின் கேள்விக்கென்ன பதில்? யார் சொல்வது பதில்? மாவட்ட நிர்வாகமே!  உயிர்களின் பலி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது! சிமெண்ட் ஆலைகள் இயக்கும் லாரிகளால் தொடரும் விபத்தும் பின்னணியும் என்ன என்பதனை பார்ப்போம்...
 

அடுக்கடுக்கான இந்த கேள்விகளுக்கு விடை கொடுத்தால் உயிர் பலி நடைபெறாது என்று உத்தரவாதம் அளிக்க முடியும்.

 

Ariyalur




கேள்வி 1 
 எத்தனை கனரக வாகனங்கள் சிமெண்ட் ஆலைகளால் இயக்கப்படுகிறது?
 

கேள்வி 2
 எத்தனை ஓட்டுநர்கள் பணிக்கு பயன்படுத்தப்படுகிறார்கள்?
 


கேள்வி 3
 ஓட்டுநர்கள் உரிமம் முழுவதும் வட்டார போக்குவரத்து அலுவலரால் நகல் எடுத்து ஆவணப்படுத்தும் நடைமுறை உள்ளதா? 


கேள்வி 4
 காவல்கண்காணிப்பாளரிடம் ஒட்டுமொத்த ஓட்டுநரின் உரிமங்களும் உண்மை தான் என்பதற்கு ஆவணம் உள்ளதா?


கேள்வி 5
 ஓட்டுநர்கள் உடல் தகுதி உடையவர்கள் என்ற அடிப்படை தகுதி உண்மை தன்மை தான் என்ன?


கேள்வி 6
 ஓட்டுநர்கள் கண் பரிசோதனை செய்யப்பட்டு தான் ஓட்டுகிறார்களா?


கேள்வி 7
 பொதுமக்களின் உயிர்கள் மீது கவனத்துடன் வாகனங்களை இயக்க மனப்பயிற்சி வழங்கப்படுகிறதா?


கேள்வி 8 
அனைத்து வாகனங்களிலும் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டும் விபத்துக்களை குறைக்க முடியாத காரணம் என்ன?




கேள்வி 9 
மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகத்தினர் கூடுதல் கவனம் செலுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? 


கேள்வி 10 
ஓட்டுநர்கள் வாகனத்தை இயக்கும் போது செல்போனில் படம் மற்றும் நண்பர்கள் உறவினர்களுடன் வீடியோ அழைப்பு செய்கிறார்கள் மாவட்ட காவல்துறை கண்காணிக்க எடுத்த நடவடிக்கை என்ன?

கேள்வி 11
 இரு சக்கர வாகனங்கள் இயக்குபவர்களை கடுமையான பரிசோதனை செய்வது போல கனரக வாகனங்கள் இயக்கும் ஓட்டுநர்கள் பரிசோதிக்கப்படுவது இல்லை எனவும் பல கனரக வாகன ஓட்டுநர்கள் மது அருந்திவிட்டு குடிபோதையில் வாகனங்களை இயக்குவதாக வரும் குற்றச்சாட்டுகளுக்கு மாவட்ட நிர்வாகம் கேள்வி கேட்காமல் மவுனமாக இருப்பது ஏன்?




கேள்வி 12 
அரியலூர் நகரம்- விகைகாட்டி பகுதி வரை மாவட்ட ஆட்சியரிடம் உறுதி அளித்துள்ளபடி சிமெண்ட் ஆலை நிறுவனங்கள்  காலை 6 மணி முதல் 10 மணி வரையும் மாலை 3 மணி முதல் 6 மணி வரை கனரக வாகனங்களை இயக்குவதில்லை என்று ஆலை உரிமையாளர்கள் உறுதியளித்துள்ளனர். அந்த இடைப்பட்ட நேரத்திற்குள் வாகனங்கள் ஓட்டும் ஓட்டுநர்களுக்கு ரூ.1500/- சம்பளம் நிர்ணயித்து அவர்களுக்கு 6 லோடு ஓட்டியே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதும் அதனால் வாகனங்களை வேகமாக இயக்க வேண்டியிருப்பதாகவும் குறைத்து ஓட்டினால் சம்பளம் குறைத்து தருவார்கள் மேலும் குறைவான நடை ஓட்டினால் ஓட்டுநர் இறக்கிவிடப்பட்டு புதிதாக ஓட்டுநர் வருவார். புதிதாக வரும் நபர் வாகனத்தினை புரிந்து செயல்பட குறைந்தபட்ச அவகாசம் முடிவதற்குள் அடுத்த ஓட்டுநர் என மாறிவருவது தொடர்கதை...!
 

கேள்வி
13 அனுபவமிக்க ஓட்டுநரை பணியிலமர்த்த நடவடிக்கை தேவை! மேலும் ஸ்மார்ட் அட்டை வழங்குவதன் மூலம் ஓட்டுநரின் ஒட்டுமொத்த வரலாறு தெரிந்துவிடும் சென்னை போன்று அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சிமெண்ட் ஆலைகள் வாகனங்களை இயக்கும் பெரும்பாலான நபர்கள் குட்டி யானை லோடு ஆட்டோ மற்றும் டிராக்டர் இயக்கியவர்கள் தான் என்றும் அனுபவமிக்க ஓட்டுநர்களை நியமிக்காத காரணத்தால் தான் விலை மதிப்பற்ற மனித உயிர் கேட்பாரற்று தினந்தினம் போய்க் கொண்டே இருக்கிறது என்ற குற்றச்சாட்டு உங்கள் காதில் விழுகிறதா?
 


கேள்வி
14 ஆலை முதலாளிகள் (கூடுதலாக லோடு வர வேண்டும் இலாபம் ஈட்ட) கனரக வாகனங்கள்  உரிமையாளர்கள் ( கூடுதலாக இயக்கப்படும் ஒவ்வொரு லோடுக்கும் வருமானம் ஆலை நிர்வாகம் போனஸ் தரும் என்பதற்காக) ஓட்டுநர்கள் ( குறிப்பிட்ட லோடுக்கு குறைவாக ஓட்டினால் தனக்கு வருமானம் போய்விடும் என்ற பயத்தில் வேகமாக ஓட்ட வேண்டிய நிலை) என மூவரும் சம்பாதிக்க அப்பாவிகள் தினந்தோறும் பலி கடா ஆக்கப்படுகிறார்கள்?
 


கேள்வி
15. முன்னே பின்னே சைடு என மிகுந்த கவனமுடன் பார்த்து வாகனம் ஓட்ட உதவியாளர்கள் இருந்த காலம் மலையேறிவிட்டது.( சம்பளம் கூடுதலாக தர வேண்டும் என்பதால் உதவி ஆட்களை கிளீனர்களை நிறுத்தி விட்டனர் ( இதனால் வாகனங்கள் விபத்து அதிகமாகிறது என்ற குற்றச்சாட்டையும் மறுப்பதற்கில்லை. எனவே பழையபடி ஒவ்வொரு வாகனத்திலும் கிளீனர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆலை உரிமையாளர்கள் குறைந்த லோடுகள் வருவதால் இழப்பு ஏற்படும் என வாகன உரிமையாளர்களின் அச்சத்தை போக்கும் வகையில் அவர்களுக்கு லோடுக்கு கூடுதல் கட்டணத்தை தர நடவடிக்கை எடுக்க வேண்டும். 
 

இது தான் நிரந்தர நிர்வாக தீர்வாக இருக்க முடியும் செய்வீங்களா! செய்வீங்களா! இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 
 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

மண் சரிவில் சிக்கிய தொழிலாளர்; மீட்கும் பணியில் ஏற்பட்ட சோகம்!

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
Labor trapped in landslide in chennai

சென்னை, கிழக்கு தாம்பரம் அருகே ஆதிநகர் பகுதி ஒன்று உள்ளது. இங்கு, தாம்பரம் மாநகராட்சி சார்பில் தனியார் நிறுவனம் மூலம் பாதாள சாக்கடை திட்டத்திற்காக பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று வந்தது. பாதாள சாக்கடைக்கான பள்ளம் தோண்டி பைப்லைன் பொருத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், இன்று (16-03-24) மாலை திடீரென பள்ளத்தில் மண் சரிந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், திட்டக்குடியைச் சேர்ந்த தொழிலாளர் முருகானந்தம் என்பவர் மண் சரிவில் சிக்கினார். இந்த சம்பவம் குறித்து அங்குள்ளவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர், மண் சரிவில் சிக்கியிருந்த முருகானந்தனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 

அதில், ஜே.சி.பி வாகன உதவியுடன் தீயணைப்புத் துறையினர், முருகானந்தனை மீட்கும் பணியில் ஈடுபட்டபோது தலை மட்டும் வந்துள்ளது. இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, முருகானந்தனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

தொடர் விபத்து; திடீரென சாலையில் கவிழ்ந்த லாரி

Published on 15/03/2024 | Edited on 15/03/2024
 truck overturned on the Thiruvananthapuram National Highway

கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து அதிக அளவிலான கனிம வளங்களை அதிக பாரத்தோடு கேரளாவுக்கு கடத்திச் செல்லும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. இந்நிலையில், கனிம வளங்கள் திருடப்படுவதை தடுக்க பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனையடுத்து, கனிம வள கொள்ளையை தடுக்கும் வண்ணம் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு கனிம வள கொள்ளையில் ஈடுபடும் லாரிகள், இதே பகுதியில் விபத்துகளிலும் அடிக்கடி சிக்கிக்க் கொள்கின்றன. இதன் காரணமாக இந்தப் பகுதிகளில் விபத்துக்கள் அதிகமாக நடக்காமலிருக்க, போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இதற்கிடையில், இந்த மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் நகராட்சி, மாநகராட்சியாக மாற்றம் பெற்றது. இதனால், நாகர்கோவில் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் சாலைகள் விரிவுப்படுத்தும் பணி தொடங்கியது. அதே சமயம் இந்தப் பகுதியில் விபத்துகள் ஏற்படாமல் இருக்க சாலைகளில் பல இடங்களில் கான்கிரீட் கட்டைகளால் ஆன சென்டர் மீடியன் அமைக்கப்பட்டுள்ளது. இது அமைக்கப்பட்ட பிறகு விபத்துகள் குறையும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த சென்டர் மீடியன் அமைக்கப்பட்ட பிறகுதான் தற்போது இந்தப் பகுதியில் அதிகமாக விபத்து ஏற்பட ஆரம்பித்துள்ளது என பொதுமக்கள் கூறுகின்றனர்.

இதில் கடந்த 10 நாட்களில் மட்டுமே சுமார் 6க்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்துள்ளதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் மேலும் ஒரு விபத்து நடந்துள்ளது. மார்த்தாண்டத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி லோடு ஏதும் இல்லாமல் டாரஸ் லாரி ஒன்று சென்றுள்ளது.

அப்போது, அந்த டாரஸ் லாரி திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக சென்றதாக கூறப்படுகிறது. இவ்வாறு வேகமாகச் சென்ற அந்த டாரஸ் லாரியை, வெள்ளிக்கோடு பகுதியில் உள்ள வளைவில் ஓட்டுனநர் திருப்ப முயன்றுள்ளார். ஆனால், சற்றும் எதிர்பாராத நேரத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த வாகனம், சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த டிவைடர் சிமெண்ட் கட்டையில் என மோதியுள்ளது. உடனே சுதாரித்துக்கொண்ட ஓட்டுநர் அந்த லாரியை அங்கேயே நிறுத்த முயற்சி செய்துள்ளார். அப்போது டாரஸ் லாரியை நிறுத்த ஓட்டுநர் பிரேக் பிடித்தபோது, அந்த லாரி வேகமாக புரண்டு பெரும் சத்தத்துடன் பொத்தென்று கீழே விழுந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.