Skip to main content

"மக்கள்தான் எனக்கு உளவுத் துறை"- உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் எஸ்.பி. பேச்சு...!

Published on 15/01/2020 | Edited on 15/01/2020

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று புதிதாக பொறுப்பேற்றுள்ள  கிராம ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு மாவட்ட காவல் துறை சார்பில் கிராம பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து ஊராட்சி மன்றத் தலைவர்கள், துணைத்தலைவர்கள் கலந்து கொண்டனர்.

 

People are the intelligence-SP told local government representatives

 



கூட்டத்தை தொடங்கி வைத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார் பேசும் போது, "கிராம ஊராட்சியில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் பிரதிநிதிதான் ஊராட்சி மன்றத்  தலைவர். அரசுக்கும், மக்களுக்கும் பாலமாக இருப்பவர்கள் ஊராட்சி மன்றத் தலைவர்கள்தான். வாக்களித்து தங்களை வெற்றி பெறச் செய்து இந்த உயர்ந்த பொறுப்பை கொடுத்துள்ள பொது மக்களுக்கு விருப்பு வெறுப்பின்றி மனசாட்சியோடு பணியாற்றுங்கள்.

ஊராட்சிகளில் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டியோ அல்லது தாங்கள் பங்கேற்கும் பல்வேறு நிகழ்ச்சிகள் வாயிலாகவோ சாலை விதிமுறைகளை கடைபிடிப்பது, தலைக்கவசம் அணிவது, சீட் பெல்ட் அணிவதன் அவசியத்தை ஊராட்சி மன்றத் தலைவர்கள் அந்தந்த கிராம மக்களுக்கு  அறிவுறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

24 மணி  நேரமும் தூங்காத, கட்சி, சாதி, மத பாகுபாடு இல்லாத ஒரு காவலரை நியமித்துக் கண்காணிப்பதற்கு இணையான பணியை கண்காணிப்பு கேமராக்கள் செய்கிறது. உள்ளதை உள்ளபடி படம் பிடித்து காட்டிவிடும். இது உங்கள் பகுதிகளில் நடக்கும் குற்றங்களைத் தடுக்கவும், குற்ற செயல்களை கண்டறியவும் பெரிதும் உதவியாக இருப்பதால் கிராமங்களில் முக்கியமான இடங்களில்  கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த ஊராட்சி மன்றத் தலைவர்கள் முன்வர வேண்டும்.

அதே போல எஸ்.ஒ.எஸ். காவலன் செயலியை அனைவரது செல்போன்களிலும் பதிவிறக்கம்செய்து பயன்படுத்துமாறு அறிவுறுத்த வேண்டும். இந்த செயலி மூலம் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். பல இடங்களில் பெண்களுக்கான பிரச்சனைகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

 



புதுக்கோட்டை மாவட்டத்தில் நான் செல்லக்கூடிய  இடங்களில்  எனது செல்போன் எண்ணைக் கொடுத்து வருகிறேன். மேலும், எனது மேற்பார்வையில் இம்மாவட்டத்தில் 'ஹலோ போலீஸ்' எனும் செயலியும் (எண் 7293911100) சிறப்பாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஹலோ போலீஸ் செயலி தொடங்கி 35 நாட்களில் 200-க்கும் மேற்பட்ட தகவல்கள் பெறப்பட்டன. 

அவற்றில், 59 சம்பவங்களுக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனால்  எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் எனது கவனத்துக்கு கொண்டுவாருங்கள். செல்போனில் பேசவில்லை  என்றாலும் எஸ்எம்எஸ், வாட்ஸ்அப் மூலம் பதிவிடலாம். வீடியோ எடுத்தும் அனுப்பலாம். என்னிடம் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். காவல் துறையில் உள்ள உளவுத்துறையைவிட மக்கள்தான் எனக்கு உளவுத்துறை. மக்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்பதற்காகவே காவல் துறை செயல்பட்டு வருகிறது. அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும்" என தெரிவித்தார். 
   

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.