மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு அவ்வப்போது நாட்டின் விலைவாசி உயர்வுக்கு ஏற்றார்ப்போல் அகவிலைப் படி உயர்த்தி வழங்கப்படும். இது அரசுப் பணியிலிருந்து ஓய்வுபெற்று ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் பொருந்தும். இந்நிலையில்போக்குவரத்து ஓய்வூதியர்கள், 70 மாதங்களாக வழங்காமல் உள்ள அகவிலைப் படியை வழங்க கோரி சென்னை பல்லவன் இல்லம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.