Skip to main content

ஆவணமின்றி யானை வைத்திருந்தவர்களுக்கு அபராதம்... வனத்துறை அதிரடி!

Published on 29/05/2022 | Edited on 29/05/2022

 

Penalty for possession of undocumented elephant ... Forest Department Action!

 

நெல்லை மாவட்டத்தின் களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகம், அம்பை கோட்டம், கடையம் வனச்சரகத்திற்குட்பட்ட கோவிந்தபேரி பீட் வெளிமண்டலப் பகுதியின் பாப்பன்குளம் கிராமத்தில் தனியார் இருவர் யானை வைத்திருப்பதாக கடையம் வனச்சரக அலுவலகரான ராதைக்குத் தகவல் கிடைக்க, அவரது உத்தரவின் அடிப்படையில் வனகாப்பாளர் ரமேஷ் உள்ளிட்ட வனத்துறையினர் குறிப்பிட்ட பகுதிக்குச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் கேரளாவின் கோட்டயத்திலிருந்து பொட்டல் புதூர் கமிட்டிக்கு இனாமாகப் பெறப்பட்ட அந்த யானையை உரிய உரிம ஆவணமின்றி கொண்டுவந்தது தெரிய வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து பொட்டல் புதூரைச் சேர்ந்த பீர்முகமது, பக்கர் இருவருக்கும் களக்காடு முண்டன்துறை புலிகள் வனக் காப்பக இயக்குநர் செண்பகபிரியாவின் உத்தரவின்படி, தலா 25,000 வீதம் 50,000 ரூபாய் அபராதம் விதித்தனர். இதனைப்போன்று உரிய அரசு ஆவணமின்றி வனஉயிரியல் இனமான யானையை வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றம் என்கிறார்கள் வனத்துறையினர்.

 

அவர்களிடம் சில பேப்பர்கள் இருக்கின்றன ஆனால் தமிழக வனத்துறையின் உரிய அனுமதி இல்லை. எனவே யானை வந்த விதம் பற்றி விசாரணை நடத்தப்படுகிறது என்கிறார் வனச்சரக அலுவலகரான ராதை. கேரளாவில் யானைகளுக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம்.

 

கேரளாவின் கொல்லம் கோட்டயம், பத்தனம்திட்டா போன்ற பகுதிகளில் நாம் விசாரித்தபோது, கேரள மாநில சட்டப்படி யானையை வாங்குவதும் விற்பதும் குற்றம். தண்டனைக்குரியது. மாநில அரசால் கூட யானையை விற்க முடியாதாம். அந்த மாநில  வனச் சட்டப்படி, யானையை வைத்திருப்பவர்கள் அரசால் வழங்கப்பட்ட உரிய லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும். மலைமுகடுகளைக் கொண்ட கேரளாவில் யானைகள் அதிகம் என்பதால் அவைகளைப் பாதுகாக்க வேண்டி நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன என்கிறார்கள். மேலும் ஒரு யானையின் விலையே சாதாரணமாக ஒன்றரை கோடியைத் தாண்டுமாம்.

 

மேலும் கோவில்களைக் கொண்ட கடவுள்களின் தேசமான கேரளாவில் யானைகளை அம்பாரி, ரத்தினம் பதித்த அங்கி கம்பளம் போன்ற சர்வ அலங்காரங்களுடன் அலங்கரித்து கோவில்களின் விழாவின் போது கொண்டு வரப்படுகிற அலங்கார யானைகளின் கம்பீர நடையைக் காண்பதற்கு கேரள மக்கள் ஆர்வம் காரணமாக அலை அலையாகத் திரள்வதுண்டு. திருக்கடவூர், திருச்சூர்பூரம், திருவாங்கூர் தேவசம் போர்டு ஆலயங்களின் திருவிழாக்களில் கலந்து கொள்கிற ஜோடிக்கப்பட்ட ஒரு யானையின் ஒரு நாள் வாடகையாக, 2 லட்சம், 3, 4 லட்சம் என்று யானையின் கம்பீர தோற்றத்திற்கு ஏற்ப தரப்படுமாம். இப்படி யானைக்கான வாடகைத் தொகை லட்சங்களில் கிடைப்பதாலேயே யானையை வைத்திருக்கும் தனியார்கள் சிலர் வியாபார நோக்கில் பயன்படுத்துவதும் உண்டாம். யானை இருந்தாலும், இறந்தாலும் ஆயிரம் பொன்தான் என்கிறது சொல்லாடல்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Police register cheating case against producers of Manjummel Boys

இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியான மலையாளப் படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. பரவா பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்திருந்தார். இப்படம் கொடைக்கானலில் நடந்த உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்டிருந்தது. 2006 ஆம் ஆண்டு கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் கேரள இளைஞர்கள், ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சிக்கி அதிலிருந்து எப்படி மீள்கின்றனர் என்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது.

ad

சர்வைவல் த்ரில்லர் ஜானரில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழிலும் ரசிகர்கள் பாராட்டி வந்தனர். இப்படம் உலகம் முழுவதும் ரூ.200 கோடி வசூலித்து மலையாள திரையுலகில் ரூ.200 கோடி கிளப்பில் இணைந்த முதல் படம் என்ற சாதனையை படைத்தது. இந்த நிலையில் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான பரவா பிலிம்ஸ் பங்குதாரர் ஷான் ஆண்டனி, லாபத்தில் பங்கு தருவதாக கூறி ஏமாற்றி விட்டதாக கேரளா அரூர் பகுதியைச் சேர்ந்த சிராஜ் என்பவர் எர்ணாகுளம் கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “ மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்காக ரூ.7 கோடியை முதலீடு செய்தேன். பட தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரர் ஷான் ஆண்டனி லாபத்தில் 40 சதவீதம் பங்கு தருவதாக கூறியிருந்தார். ஆனால் இதுவரை எனக்கு ஒரு ரூபாய் கூட பணம் தரவில்லை. லாபம் மட்டும் இல்லாமல் முதலீடு செய்த பணத்தை கூட திருப்பி தரவில்லை” என குற்றம் சாட்டியிருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்தின் தயாரிப்பாளர்களான சவுபின் ஷாஹிர், ஷான் ஆண்டனி, பாபு ஷாஹிர் ஆகியோரின் வங்கிக் கணக்கை முடக்க உத்தரவிட்டிருந்தார். இது தொடர்பாக விளக்கம் கேட்டு தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர்கள் வுபின் ஷாஹிர், ஷான் ஆண்டனி, பாபு ஷாஹிர் ஆகிய மூன்று பேர் மீதும் மரடு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எர்ணாகுளம் நீதிமன்ற உத்தரவின்படி வழக்கானது பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.