'குப்பையை தரம் பிரித்து வழங்காத வீட்டிற்கு அபராதம்'-சென்னை மாநகராட்சி அறிவிப்பு!

 'Penalty for home if garbage is not graded' - Corporation notice!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் தனிநபர் இல்லங்களில் கொடுக்கப்படும் குப்பையை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்க வேண்டும். அப்படி தரம் பிரித்து தாராவிடில் 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து தராத இல்லத்திற்கு ஒரு நாளைக்கு 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும், குப்பையை தரம் பிரித்து வழங்காத இல்லங்களுக்கு முதலில் தகவல் தெரிவிக்கப்படும், பின்னர் கடைப்பிடிக்கப்படாத பட்சத்தில் 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Announcement
இதையும் படியுங்கள்
Subscribe