'Penalty for exceeding 40 kmph'-Chennai Police Notification

சென்னையில் 40 கிலோமீட்டர் வேகத்தை மீறி வாகனம் ஓட்டினால் அபராதம் விதிக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

Advertisment

இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், ''சென்னை பெருநகரில் வாகன விபத்துகளை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. விபத்துகளை குறைக்க மணிக்கு 40 கிலோமீட்டர் வேகம் என்ற கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது.

சென்னையில் மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தை மீறி வாகனத்தை ஓட்டினால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். இந்த கட்டுப்பாடு சென்னையில் 10 இடங்களில் அமலுக்கு வருகிறது. விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டை மீறி வேகமாக செல்லும் வாகனங்களை கண்டறிய 20 இடங்களில் கண்காணிப்பு கருவிகள் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது'' என்றார்.

Advertisment