Skip to main content

முழுக்க முழுக்க மணலில் கட்டப்பட்ட குளத்தின் தடுப்புச்சுவர்! அதிகாரிகளின் அடுத்த படைப்பு! சாதனைக்கு மேல் சாதனை!

Published on 08/06/2019 | Edited on 08/06/2019

புதுக்கோட்டை மாவட்டத்தில் மத்திய அரசு நிதியில் இருந்து கிராமங்களில் கட்டப்படும் பாலங்கள், அமைக்கப்படும் சாலைகள் அனைத்தும் ஊரகவளர்ச்சி முகமை அதிகாரிகளின் சாதனை படைப்புகளாகவே உள்ளது. 
 

The pedestal wall of the pond built only on sand! The next creation of the officers

கடந்த மாதம் 3 ந் தேதி அறந்தாங்கி பணிக்கன்வயல் சாலையை பற்றி எழுதினோம். கடந்த வாரத்தில் பொன்னமராவதி செவலூர் விலக்கு சாலையில் மண்ணால் கட்டப்பட்ட பாலம் பற்றியும், ஒலியமங்கலம் வழியாக செல்லும் புதிய சாலை கைகாளால் அள்ளப்படும் நிலையில் உள்ளதைப் பற்றியும் அதிகாரிகளின் சாதனைப் படைப்புகளாக வாசர்களுக்கு படங்களுடன் கொடுத்தோம். இந்தநிலையில்தான் அதே பொன்னமராவதி ஒன்றியத்தில் மற்றும் ஒரு படைப்பாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

 

The pedestal wall of the pond built only on sand! The next creation of the officers

 

அந்த வீடியோவில்.. ஒலியமங்கலம் கிராமத்தில் உள்ள குளத்து தண்ணீர் ஊருக்குள் சென்றுவிடாமல் தடுக்கவும் தண்ணீரை தேக்கி வைக்கவும் தேசிய ஊராக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் (மத்திய அரசு நிதிதான்) அன்னக்காரன் குளத்திற்கான தடுப்புச் சுவர் கட்டும் பணி. முழுமையாக 100 நாள் வேலை ஆட்களை வைத்து கட்டப்பட்டதாக அந்த விளம்பர பதாகை சொல்கிறது. மேலும் அந்த பதாகையில் அந்த சுவர் அமைக்க பொருள் கிரயம் ரூ. 6 லட்சத்தில் 56 ஆயிரத்தி, 882, சுமார் 4 ஆயிரத்தி 300 நபர்கள் ஒரு நாளைக்கு ரூ. 229 சம்பளத்தில் வேலை செய்துள்ளனர். ஆக சுவர் கட்டி முடிக்க சம்பளம் ரூ. 9 லட்சத்தில் 87 ஆயிரத்தி 118. ஆக மொத்தம் குளத்தின் தடுப்புச் சுவர் கட்டி ரூ. 16 லட்சத்தில் 44 ஆயிரம் முழுமையாக பதாகையில் கணக்கு எழுதப்பட்டுவிட்டது. 

 

The pedestal wall of the pond built only on sand! The next creation of the officers

 

இந்த பணிகளை பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் செய்து முடித்துள்ளனர். இத்தனை மனித உழைப்பு, பொருள் செலவில் கட்டி முடிக்கப்பட்ட தடுப்புச் சுவர் பலமாகத் தான் இருக்கும் என்ற நம்பிக்கை அந்த கிராம மக்களுக்கு.. 
 

 

ஆனால் சில நாட்களுக்கு முன்பு அந்த சுவற்றில் ஒரு ஆடு போகும் போது உடைந்து மணல் கொட்டியதைப் பார்த்த இளைஞர்கள் வெறுத்துப் போனார்கள். உடனே செல்போனில் வீடியோ ஓடவிட்டபடியே சுவர் முழுவதும் கை விரலால் அழுத்திக் கொண்டே போக சாதனைக்காக மணலில் கட்டப்பட்ட சுவர் உடைந்து கொண்டே வந்தது. இந்த சாதனையை இளைஞர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிட்டுள்ளனர். 

 

 

The pedestal wall of the pond built only on sand! The next creation of the officers

 

இது குறித்த இளைஞர்கள் கூறும் போது.. மத்திய அரசு கிராமங்களுக்கு கோடி கோடியாக நிதி ஒதுக்கி கொடுக்கிறது. ஆனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் அந்த பணத்தை அதிகாரிகளும், ஒப்பந்தக்காரர்களும் முழுமையாக பங்கு போட்டு எடுத்துக் கொண்டு 30 சதவீதம் கூட செலவு செய்யாமல் தரமற்ற பணிகளை செய்து வருகிறார்கள். எங்க ஊர் வழியாக செல்லும் சாலையில் தார் கலவையே இல்லாமல் ஆயிலை கலந்து ரோடு போட்டுட்டு போயிட்டாங்க. இப்ப தடுப்புச் மழைத் தண்ணீர் ஊருக்குள் வந்துவிடாமல் தடுக்க தடுப்பு சுவர் கட்டி இருக்காங்க. முழுமையாக மணல் மட்டுமே உள்ளது. விரலில் அழுத்தினால் உடையுது தண்ணீர் நிறைந்தால் எப்படி தடுக்கும் இந்த சுவர். சுவர் இருந்த சுவடே காணாமல் போய்விடும். அத்தனையும் கரைந்து போகும். யாராவது இந்தப் பக்கம் வங்தால் அவர்கள் மேல் விழுந்து விபத்துகள் தான் ஏற்படும். 

 


 

மத்திய அரசு நிதியில் இத்தனை மோசடி நடப்பது தெரிந்தும் மாவட்ட ஆட்சியர் ஏன் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டி வருகிறார் என்பது தான் கேள்விக்குறியாக உள்ளது. அதைவிட பா.ஜ.க தலைவர்கள் அவர்களின் ஆட்சிக்கு ஏற்படும் கெட்ட பெயரை தடுக்கவாவது இந்த பணிகளை நல்ல செய்ய சொல்லலாம் அவர்களும் தயங்குவது ஏனோ என்றனர். எல்லாம் பண மயம்.. ஊராக வளர்ச்சித்துறை அதிகாரிகளின் அடுத்த படைப்பும் விரைவில் வெளிவரலாம்... காத்திருப்போம்...


 

சார்ந்த செய்திகள்

Next Story

பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழந்த சோகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

புதுக்கோட்டையில் பாம்பு கடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் எம்.குளவாய்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சின்னதுரை மகள் விசித்ரா (வயது 14). இவர் அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஒரு வார காலமாக தேர்தலுக்காக சில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி விசித்ரா தனது வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்கு இரைதேடிச் சென்றவர் ஒரு கருவேலமரத்தடியில் கொட்டிக்கிடந்த கருவேலங்காய்களை சேகரித்த போது கீழே இருந்த பாம்பு விரலில் கடித்துள்ளது.

பாம்பு கடித்து அலறிய சிறுமியை உடனே அங்கிருந்தவர்கள் மீட்டு, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பாம்பின் விஷம் வேகமாக உடலில் பரவியுள்ள நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் மாணவி விசித்ரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியின் இறப்பால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

Next Story

கடைசிவரை பேச்சுவார்த்தை தோல்வி; இறுதிவரை புறக்கணித்த இறையூர் மக்கள்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் தமிழ்நாட்டிலேயே புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் அதிகமான கிராமங்களில் தேர்தல் புறக்கணிப்பு பதாகைகளை காண முடிந்தது. அதேபோலதான் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதி, முத்துக்காடு ஊராட்சி, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை குடி தண்ணீர் தொட்டியில் மனித கழிவு கலந்த உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரி தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக 502 வாக்காளர்களைக் கொண்ட இறையூர் கிராம மக்கள் பதாகை வைத்தனர்.

அதேபோல இதேகோரிக்கையை வலியுறுத்தி 59 வாக்காளர்களை கொண்ட வேங்கை வயல் கிராம மக்களும் தேர்தல் புறக்கணிப்பு பதாகை வைத்தனர். இந்த பகுதிக்கு எந்த ஒரு வேட்பாளரும் வாக்கு கேட்டு வரவில்லை. திருச்சி நாடாளுமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மட்டும் வந்து சென்ற நிலையில் அவர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இறையூர் மற்றும் வேங்கை வயல் கிராமங்களில் உள்ள 561 வாக்காளர்கள் வாக்களிக்க வேங்கைவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குப்பதிவு மையத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த நிலையில், காலை முதல் வாக்குப் பதிவிற்கு அதிகாரிகள் காத்திருந்த நிலையில் அரசு ஊழியர் வாக்கு ஒன்று பதிவானது, தொடர்ந்து இந்த வாக்குச் சாவடியில் வாக்களிக்க காவேரி நகர் உள்ளிட்ட வெளியூரில் இருந்த சிலர் வந்து வாக்களித்தனர். மதியம் வரை 6 வாக்குகள்  மட்டுமே பதிவாகி இருந்தது.

nn

இரு கிராம மக்களும் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். திருச்சி பாராளுமன்றத் தொகுதிக்குட்ட பகுதி என்றபதால் மாலை திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் வந்த அதிகாரிகள் வேங்கைவயல் கிராம மக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர், அப்போது தண்ணீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும். எங்களுக்கு தனியொரு இடத்தில் குடியிருப்பு பகுதி ஏற்படுத்தி வீடுகள் கட்டித்தர வேண்டும், வாழ்வாதாரத்திற்கு விளைநிலம், தொழில் வசதி செய்து தர வேண்டும் என்று பல கோரிக்கைகள் முன் வைத்தனர். இதனைக் கேட்ட அதிகாரிகள் வழக்கு சம்மந்தமாக சிபிசிஐடி விசாரணை நடக்கிறது உங்களுக்கே தெரியும் விரைவில் கைது செய்வார்கள். மற்ற கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம் அதனால் வாக்குப்பதிவு செய்யுங்கள் என்று கூறினர். அதனையடுத்து மாலை 5 மணிக்கு பிறகு வேங்கைவயல் மக்கள் 59 வாக்காளர்களில்  53 பேர் இரவு 7 மணி வரை வாக்களித்தனர்.

அதேபோல இறையூர் கிராம மக்களிடம் அதிகாரிகள் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு சென்ற போது, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்யும் வரை எந்த தேர்தலிலும் வாக்களிக்க மாட்டோம் என்று கூறிவிட்டனர். சொன்னது போல முழுமையாக வாக்குப் பதிவை புறக்கணித்துவிட்டனர். இறையூர் கிராம மக்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. வேங்கைவயல் மக்களின் 53 வாக்குகளுடன் சேர்த்து மொத்தமே 62 வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்து இறையூர் மக்கள் முழுமையாக தேர்தலை புறக்கணித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேங்கை வயல் கிராம தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கும் வரை அனைத்து தேர்தல்களையும் புறக்கணிப்போம் என்பதில் இறையூர் கிராம மக்கள் ஒருங்கிணைந்து நிற்கிறோம் என்கின்றனர் இறையூர் மக்கள்.