Skip to main content

முழுக்க முழுக்க மணலில் கட்டப்பட்ட குளத்தின் தடுப்புச்சுவர்! அதிகாரிகளின் அடுத்த படைப்பு! சாதனைக்கு மேல் சாதனை!

Published on 08/06/2019 | Edited on 08/06/2019

புதுக்கோட்டை மாவட்டத்தில் மத்திய அரசு நிதியில் இருந்து கிராமங்களில் கட்டப்படும் பாலங்கள், அமைக்கப்படும் சாலைகள் அனைத்தும் ஊரகவளர்ச்சி முகமை அதிகாரிகளின் சாதனை படைப்புகளாகவே உள்ளது. 
 

The pedestal wall of the pond built only on sand! The next creation of the officers

கடந்த மாதம் 3 ந் தேதி அறந்தாங்கி பணிக்கன்வயல் சாலையை பற்றி எழுதினோம். கடந்த வாரத்தில் பொன்னமராவதி செவலூர் விலக்கு சாலையில் மண்ணால் கட்டப்பட்ட பாலம் பற்றியும், ஒலியமங்கலம் வழியாக செல்லும் புதிய சாலை கைகாளால் அள்ளப்படும் நிலையில் உள்ளதைப் பற்றியும் அதிகாரிகளின் சாதனைப் படைப்புகளாக வாசர்களுக்கு படங்களுடன் கொடுத்தோம். இந்தநிலையில்தான் அதே பொன்னமராவதி ஒன்றியத்தில் மற்றும் ஒரு படைப்பாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

 

The pedestal wall of the pond built only on sand! The next creation of the officers

 

அந்த வீடியோவில்.. ஒலியமங்கலம் கிராமத்தில் உள்ள குளத்து தண்ணீர் ஊருக்குள் சென்றுவிடாமல் தடுக்கவும் தண்ணீரை தேக்கி வைக்கவும் தேசிய ஊராக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் (மத்திய அரசு நிதிதான்) அன்னக்காரன் குளத்திற்கான தடுப்புச் சுவர் கட்டும் பணி. முழுமையாக 100 நாள் வேலை ஆட்களை வைத்து கட்டப்பட்டதாக அந்த விளம்பர பதாகை சொல்கிறது. மேலும் அந்த பதாகையில் அந்த சுவர் அமைக்க பொருள் கிரயம் ரூ. 6 லட்சத்தில் 56 ஆயிரத்தி, 882, சுமார் 4 ஆயிரத்தி 300 நபர்கள் ஒரு நாளைக்கு ரூ. 229 சம்பளத்தில் வேலை செய்துள்ளனர். ஆக சுவர் கட்டி முடிக்க சம்பளம் ரூ. 9 லட்சத்தில் 87 ஆயிரத்தி 118. ஆக மொத்தம் குளத்தின் தடுப்புச் சுவர் கட்டி ரூ. 16 லட்சத்தில் 44 ஆயிரம் முழுமையாக பதாகையில் கணக்கு எழுதப்பட்டுவிட்டது. 

 

The pedestal wall of the pond built only on sand! The next creation of the officers

 

இந்த பணிகளை பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் செய்து முடித்துள்ளனர். இத்தனை மனித உழைப்பு, பொருள் செலவில் கட்டி முடிக்கப்பட்ட தடுப்புச் சுவர் பலமாகத் தான் இருக்கும் என்ற நம்பிக்கை அந்த கிராம மக்களுக்கு.. 
 

 

ஆனால் சில நாட்களுக்கு முன்பு அந்த சுவற்றில் ஒரு ஆடு போகும் போது உடைந்து மணல் கொட்டியதைப் பார்த்த இளைஞர்கள் வெறுத்துப் போனார்கள். உடனே செல்போனில் வீடியோ ஓடவிட்டபடியே சுவர் முழுவதும் கை விரலால் அழுத்திக் கொண்டே போக சாதனைக்காக மணலில் கட்டப்பட்ட சுவர் உடைந்து கொண்டே வந்தது. இந்த சாதனையை இளைஞர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிட்டுள்ளனர். 

 

 

The pedestal wall of the pond built only on sand! The next creation of the officers

 

இது குறித்த இளைஞர்கள் கூறும் போது.. மத்திய அரசு கிராமங்களுக்கு கோடி கோடியாக நிதி ஒதுக்கி கொடுக்கிறது. ஆனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் அந்த பணத்தை அதிகாரிகளும், ஒப்பந்தக்காரர்களும் முழுமையாக பங்கு போட்டு எடுத்துக் கொண்டு 30 சதவீதம் கூட செலவு செய்யாமல் தரமற்ற பணிகளை செய்து வருகிறார்கள். எங்க ஊர் வழியாக செல்லும் சாலையில் தார் கலவையே இல்லாமல் ஆயிலை கலந்து ரோடு போட்டுட்டு போயிட்டாங்க. இப்ப தடுப்புச் மழைத் தண்ணீர் ஊருக்குள் வந்துவிடாமல் தடுக்க தடுப்பு சுவர் கட்டி இருக்காங்க. முழுமையாக மணல் மட்டுமே உள்ளது. விரலில் அழுத்தினால் உடையுது தண்ணீர் நிறைந்தால் எப்படி தடுக்கும் இந்த சுவர். சுவர் இருந்த சுவடே காணாமல் போய்விடும். அத்தனையும் கரைந்து போகும். யாராவது இந்தப் பக்கம் வங்தால் அவர்கள் மேல் விழுந்து விபத்துகள் தான் ஏற்படும். 

 


 

மத்திய அரசு நிதியில் இத்தனை மோசடி நடப்பது தெரிந்தும் மாவட்ட ஆட்சியர் ஏன் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டி வருகிறார் என்பது தான் கேள்விக்குறியாக உள்ளது. அதைவிட பா.ஜ.க தலைவர்கள் அவர்களின் ஆட்சிக்கு ஏற்படும் கெட்ட பெயரை தடுக்கவாவது இந்த பணிகளை நல்ல செய்ய சொல்லலாம் அவர்களும் தயங்குவது ஏனோ என்றனர். எல்லாம் பண மயம்.. ஊராக வளர்ச்சித்துறை அதிகாரிகளின் அடுத்த படைப்பும் விரைவில் வெளிவரலாம்... காத்திருப்போம்...


 

சார்ந்த செய்திகள்

Next Story

கடத்தி செல்லப்பட்ட அரசுப் பேருந்து விபத்து

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Hijacked government bus accident

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசுப் பேருந்து பணிமனையில் உள்ள அரசுப் பேருந்துகள் அனைத்தும் இரவு நேரங்களில் பணிமனைக்குள் நிறுத்த முடியாததால் அருகே உள்ள பட்டுக்கோட்டை சாலையில் வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கும். அதிகாலை முதல் ஒவ்வொரு பேருந்தும் அந்தந்த பயண நேரத்திற்கு ஓட்டுநர்கள் ஓட்டிச் செல்வார்கள்.

வழக்கம்போல் நேற்று இரவு பேருந்துகள் சாலை ஓரத்தில் நிறுத்தி வைத்துவிட்டு ஓட்டுநர், நடத்துநர்கள் பணிமனையில் ஓய்வெடுக்கச் சென்று விட்டார். இந்நிலையில் இன்று அதிகாலை திருவாடானை செல்லும் வழியில் ஓரியூர் அருகே வண்டாத்தூர் கிராமத்தில் பிரதானச் சாலையில் ஒரு அரசுப் பேருந்து ஒரு லாரியில் மோதி விபத்துக்குள்ளாகி நின்றது. சத்தம் கேட்டு கிராம மக்கள் ஓடி வந்து பார்த்தபோது லாரி ஓட்டுநர் காலில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தார். அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் சிக்கியிருந்த அந்த பேருந்து அறந்தாங்கி பணிமனையைச் சேர்ந்த அறந்தாங்கியில் இருந்து திருவாடானை செல்லும் TN 55 N 0690 என்பது தெரிய வந்தது. ஆனால் யார் இந்த பேருந்தை ஓட்டி வந்தது என்பது தெரியவில்லை. உடனே அறந்தாங்கி டெப்போவிற்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் பிறகே சாலை ஓரம் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகளில் திருவாடானை செல்லும் பேருந்து காணாமல் போனது தெரிய வந்தது.

பணிமனையில் நிறுத்தி இருந்த பேருந்தை யார் கடத்திச் சென்றது என்று போக்குவரத்து கழக அதிகாரிகளும் ஊழியர்களும் விசாரணையில் உள்ளனர். பாதுகாப்பு மற்றும் கவனக்குறைவால் ஒரு பேருந்து கடத்தப்பட்டு விபத்து ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story

முதல் கூட்டத்திலேயே முட்டிக் கொண்ட தி.மு.க. - காங்கிரஸ்!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
DMK Congress which was knocked out in the first meeting

ராமநாதபுரம் பாராளுமன்றத் தொகுயில் உள்ள அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியின் இந்தியா கூட்டணி கட்சிகளின் செயல் வீரர்கள் கூட்டம் அறந்தாங்கியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் திமுக புதுக்கோட்டை மா.செ அமைச்சர் ரகுபதி தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், மெய்யநாதன், ராமநாதபுரம் மா.செ. காதர்பாட்சா (எ) முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ உட்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் இந்தியா கூட்டணி ராமநாதபுரம் வேட்பாளர் கே.நாவஸ்கனி (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். கூட்டத்தில் பேச வந்த அறந்தாங்கி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உதயம் சண்முகம் பேசும், “இப்போது நாங்கள் கூட்டணி கட்சிக்கு வாக்கு சேகரிப்போம் ஆனால், அறந்தாங்கி தொகுதியில் 2026 சட்டமன்றத் தேர்தலில் உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை அமைச்சர்கள் செய்து தர வேண்டும் இல்லை என்றால் தற்கொலை முயற்சியோடு அறிவாலயம் நோக்கி போவோம்” என்று பேசி கூட்டத்தில் சலசலப்பை உருவாக்கினார்.

அதனைத் தொடர்ந்து பேச வந்த காங்கிரஸ் கட்சியின் புதுக்கோட்டை தெற்கு மாவட்டத் தலைவர் ராம.சுப்புராம் பேசும் போது, “அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் அவசரப் பணியாக டெல்லி சென்றுள்ளதால் இங்கு வரமுடியவில்லை. ஆனால் இன்றைய போஸ்டரில் அவர் படம் இல்லை இனிமேல் அச்சடிக்கும் போஸ்டர்களில் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. படத்தையும் போட வேண்டும்” என்றார். மேலும் அமைச்சர் ராஜ. கண்ணப்பன் பேசும்போது, “நேற்று வேட்பாளர் அறிவிப்பு இன்று விஜயபாஸ்கர் வீட்டில் ரைடு. திராவிடர் இயக்கத்தை ஒழிக்க நினைக்கிறார்கள் பா.ஜ.க.வினர். அது ஒருபோதும் நடக்காது. பாசிக பா.ஜ.க. தான் நம்ம எதிரி அவர்களை வீழ்த்துவோம். அமைச்சர் மெய்யநாதன், “கடந்த முறை பெற்றுத் தந்த வாக்குகளைவிட அதிக வாக்குகளை பெற்றுத் தருவோம்” என்றார்.

DMK Congress which was knocked out in the first meeting

தலைமையுரையாற்றிய அமைச்சர் ரகுபதி, “முதல் கூட்டத்திலேயே சொல்கிறோம் சந்தோசமாக செல்லுங்கள், அறந்தாங்கி தொகுதியில் அதிக வாக்குகள் பெற்றுத் தருவோம். ராமநாதபுரத்திற்கு குடிநீர் கொண்டு வருவதை நாங்கள் தடுக்கவில்லை. எங்களுக்கும் கொஞ்சம் வேண்டும் என்று தான் சொன்னோம்” என்றார். மேலும் உதயம் சண்முகத்திற்கு பதில் சொல்லும் விதமாக, “இந்த முறை ஏணிக்கு வாக்களியுங்கள் அடுத்த முறை (2026) தலைவர் விரும்பினால் உதயசூரியனுக்கு வாக்களிக்கலாம். அதே போல இனிமேல் அச்சடிக்கப்படும் ஒவ்வொரு போஸ்டரிலும் அறந்தாங்கி எம்.எல்.ஏ. படம் அச்சடிக்கப்படும்” என்று காங்கிரஸ் சுப்புராமுக்கும் பதில் கூறுவது போல பேசினார். இறுதியாக பேசிய வேட்பாளர் நவாஸ்கனி, “அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றி அதிக ஓட்டுகள் பெற்றுத்தர வேண்டும்” என்றார்.

அறந்தாங்கி தொகுதி முதல் செயல்வீரர்கள் கூட்டத்தில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் படம் இல்லாமல் வடிவமைக்கப்பட்டதும், 2026 சட்மன்றத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க முடியவில்லை என்றால் அறிவாலயத்தில் தற்கொலை முயற்சி செய்வோம் என்று பேசியதும் சலசலப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.