வாளமீனு, கெண்ட மீனு, செம்மீனு எல்லாம் பார்த்திருப்பீங்க... ஏன் திமிங்கலம் கூட பாத்திருப்பீங்க மயிலு மீனு பாத்திருப்பீங்களா என கேட்டார் இன்று ஈரோட்டில் உள்ள ஒரு மீன் வியாபாரி.

 Peacock Fish in erode market...

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

ஆம் இன்று ஈரோடு மீன் மார்க்கெட்டிற்கு ஒரு வித்தியாசமாக மீன் வந்தது. அந்த மீனின் பெயர் மயில் மீன்.இதை மீன் வியாபாரிகள் 4 பேர் தூக்கி மக்களிடம் காண்பித்தனர். இது பார்க்க மிகப்பெரியதாகவும்,ஆச்சரியமாகவும் இருந்தது. இந்த மீன் சுமார் 150 கிலோ எடை உள்ளது இதை தனியாக யாரும் வாங்க முடியாது என்பதால் இந்த மீனை பலரும் சேர்ந்து வாங்கிக் கொள்கிறீர்களா என மீன் வியாபாரிகள் கேட்டனர். அதன்பின்மயில் மீனை வாங்க பலரும் போட்டி போட்டு இறுதியில்பத்து பேர் சேர்ந்து இந்த மீனை வாங்கி சென்றனர்.

ஈரோட்டுக்கு வந்த இந்த மயில் மீனைபற்றிஇன்று காலை முதல் மதியம் வரை பிரபலமாக மீன் மார்க்கெட்டில் பேசப்பட்டது.