உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 63 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன.
இந்தியாவில் 5ஆம் கட்ட ஊரடங்கு நடமுறையில் நடைமுறையில் இருந்து வருகின்றது. இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் வரும் அனைவருக்கும் பி.சி.ஆர். சோதனை கட்டாயம் செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. விமானப் பயணிகளுக்கான புதிய வழிகாட்டு முறைகளை தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது.