Published on 12/02/2021 | Edited on 12/02/2021

பழ.நெடுமாறன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் (87) உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சல் மற்றும் இருமல் காரணமாக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அவருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.