தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகேபைக்கில்வந்த இருவர் மீதுலாரிமோதியதில் ஒருவர் தரதரவெனஇழுத்துச்செல்லப்படும்சிசிடிவிகாட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டம் பேராவூரணியை அடுத்தஒட்டங்காடுபகுதியைச்சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (42). சம்பவத்தன்றுஅரசமாணிக்கம் என்ற உறவினரின்பைக்கில்பின்பக்கம் அமர்ந்துகொண்டு முத்துகிருஷ்ணன் சென்றுள்ளார். அப்பொழுதுபைக்பட்டுக்கோட்டைகொண்டிக்குளம்அருகில் உள்ள ஒருபெட்ரோல்பங்கைதாண்டி சென்றுகொண்டிருந்த பொழுது பின்னே வந்தலாரிஎதிர்பாராத விதமாக மோதியது. இதில்லாரியின்மக்காடில்சிக்கிய முத்துகிருஷ்ணன் சுமார் 30 அடி தூரம் சாலையில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த பட்டுக்கோட்டைபோலீசார்முத்துகிருஷ்ணனின் உடலைக் கைப்பற்றி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்குஉடற்கூறாய்விற்காகஅனுப்பிய நிலையில்லாரிஓட்டுநர்முனியாண்டியைகைதுசெய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த விபத்து தொடர்பாகசிசிடிவிகாட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.