Skip to main content

பட்டா பெயர் மாற்ற நூதன முறையில் லஞ்சம்; தப்பி ஓடிய விஏஓ!

Published on 27/03/2023 | Edited on 27/03/2023

 

patta name transfer incident at kallakurichi karadi chittur vao involved 

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் கரடி சித்தூரைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 40). இவருக்குச் சொந்தமான நிலம் அவரது முன்னோர்கள் பெயரில் கூட்டுப்பட்டாவாக இருந்து வந்துள்ளது. அதை தனது பெயருக்கு தனிப்பட்டவாக மாற்றம் செய்து தரக்கூறி வட்டாட்சியர் அலுவலகம் மூலம் விண்ணப்பம் செய்தார். அவரது மனு சம்பந்தப்பட்ட கரடி சித்தூர் வடக்கு கிராம நிர்வாக அலுவலர் பெரியய்யாவுக்கு அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர். கிராம நிர்வாக அலுவலர் பெரியய்யா பட்டா மாற்றம் செய்து தராமல் காலதாமதம் செய்து வந்துள்ளார்.

 

இது குறித்து கிராம நிர்வாக அலுவலரிடம் வெங்கடேசன் நேரில் சென்று பட்டா மாற்றம் செய்வதற்கு பரிந்துரை செய்யுமாறு கேட்டுள்ளார். அதற்கு கிராம நிர்வாக அலுவலர் பெரியய்யா, வெங்கடேஷனிடம் பட்டா மாற்றம் செய்து தர பத்தாயிரம் ரூபாய் லஞ்சமாக பணம் கொடுத்தால் தான் பட்டா மாற்றம் செய்து தர முடியும் என்று பேரம் பேசியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த வெங்கடேசன் பட்டா மாற்றம் செய்ய ஏன் லஞ்சம் கொடுக்க வேண்டும் இதற்கு ஒரு முடிவு கட்ட எண்ணிய வெங்கடேசன் உடனடியாக கள்ளக்குறிச்சி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் கடந்த 24ஆம் தேதி புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை  போலீசாரின் அறிவுரையின்படி ரசாயனம் தடவிய பத்தாயிரம் ரூபாய் லஞ்ச பணத்தை கொடுத்து கிராம நிர்வாக அலுவலர் பெரியய்யாவிடம் கொடுக்குமாறு ஆலோசனை கூறியுள்ளனர்.

 

அதன்படி வெங்கடேசன் லஞ்சப் பணத்துடன் கரடி சித்தூர் சென்றுள்ளார் அங்கு கிராம நிர்வாக அலுவலர் இல்லை அவரை வெங்கடேசன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் வெங்கடேசனை கச்சராபாளையம் வருமாறு அழைத்துள்ளார். அங்கு சென்ற வெங்கடேசன் கிராம நிர்வாக அலுவலர் கூறிய இடத்தில் அவருக்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த  கரடி சித்தூரை சேர்ந்த பொன்னுசாமி என்பவர் கிராம நிர்வாக அலுவலர் சற்று தூரத்தில் நிற்பதை சுட்டி காட்டி அவர் லஞ்ச பணத்தை வாங்கி வருமாறு என்னிடம் கூறியுள்ளார் என்று பணத்தைக் கேட்க அதன்படி வெங்கடேசன் பொன்னுசாமி இடம் கிராம நிர்வாக அலுவலருக்கு சேர வேண்டிய பத்தாயிரம் லஞ்ச பணத்தை கொடுத்துள்ளார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சத்யராஜ் தலைமையிலான போலீசார் பொன்னுசாமியை கையும் களவுமாக பிடித்தனர்.

 

போலீசார் பொன்னுசாமியை மடக்கிப் பிடித்த காட்சியை சற்று தூரத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்த கிராம நிர்வாக அலுவலர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பிடிபட்ட பொன்னுசாமியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கிராம நிர்வாக அலுவலர் பெரியய்யாவுக்கு இடைத்தரகராக இருந்து பொதுமக்களிடம் லஞ்சப் பணம் வசூல் செய்து கொடுக்கும் இடைத்தரகராக செயல்பட்டு வந்துள்ளார் என்பது தெரிய வந்தது. இதை பொன்னுசாமி கிராம நிர்வாக அலுவலர் கூறி அவருக்காக பணத்தை பெற்றதாக கூறி வாக்குமூலம் அளித்துள்ளார். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் தற்போது தலைமறைவாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் பெரியய்யாவை கைது செய்ய தீவிரமாக தேடி வருகின்றனர். கிராம நிர்வாக அலுவலர் இடைத்தரகர் மூலம் லஞ்சம் பெற்ற சம்பவம் கள்ளக்குறிச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடி மீது காவல் நிலையத்தில் புகார்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Police complaint against Prime Minister Modi

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கியது. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இறுதிக் கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று முன் தினம் (21.04.2024) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும். அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார்.

பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 

Police complaint against Prime Minister Modi

இந்நிலையில் வெறுப்பு பேச்சு தொடர்பாக பிரதமர் மோடி மீது டெல்லி மந்திர்மார் காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர்  பிருந்தா காரத் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், “ஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பூட்டும் வகையில் பிரதமர் பதவியில் உள்ள மோடி பேசியுள்ளார். எனவே இந்த வெறுப்பு பேச்சு தொடர்பாக பிரதமர் மோடி மீது குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் முறையிடவும் வழக்கறிஞர்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும் வெறுப்பு பேச்சுக்களை தடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் இன்று (23.04.2024) விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.