Skip to main content

கள்ளக்குறிச்சி: கரோனா முகாமில் நோயாளிகள் போராட்டம்!

Published on 25/07/2020 | Edited on 25/07/2020
patients at kallakurichi isolation ward protest for proper facilities

 

கள்ளக்குறிச்சி அருகேயுள்ள முகாமில், கரோனா பரிசோதனைக்கு வந்திருந்த நோயாளிகள் திடீரென சாலை மறியல் செய்ததால் பொதுமக்கள் பதறிப்போயுள்ளனர்.

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் கரோனா சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் தற்போது 377 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பலரது  ரத்தம்/சளி மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதற்காக பலர் இங்கே காத்திருக்கின்றனர். அப்படிப்பட்ட இந்த மையத்தில் இருந்து, திடீரென்று 200க்கும் மேற்பட்டவர்கள் முகாமிலிருந்து வெளியேறி சென்னை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

 

தகவலறிந்து கள்ளக்குறிச்சி வட்டாட்சியர்  பிரபாகரன், தியாகதுருகம் காவல் ஆய்வாளர் குமார், கரோனா தடுப்பு பிரிவு அலுவலர் அனந்தசயனம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நோயாளிகளிடம் சமாதானம் செய்தனர்.

 

அப்போது சாலை மறியலில் ஈடுபட்ட நோயாளிகள் அதிகாரிகளிடம், “இந்த முகாமில் இடநெருக்கடி அதிகமாக உள்ளது. இங்கு உள்ள நோயாளிகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும். உணவு நேரத்தின்போது ஒரே நேரத்தில் அனைவரும் திரண்டு செல்வதால் நீண்ட நேரம் வரிசையில் நெருக்கடியுடன் காத்து நிற்க வேண்டியுள்ளது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே முகாம் கட்டிடத்தில் உள்ள கீழ்த்தளம், மேல்தளம் ஆகியவற்றில் தங்க வைக்கப்பட்டுள்ள நோயாளிகளை தனித்தனியாக பிரித்து வைக்க வேண்டும். அவர்கள் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும், உணவு தரமாக வழங்க வேண்டும். கரோனா பரிசோதனை முடிவு விபரத்தினை சுகாதாரத்துறை விரைவாக தெரிவிக்க வேண்டும். 

 

அப்படி சிறப்பு மையத்திற்கு அழைத்து செல்லப்படும் நோயாளிகளை 10 நாட்களில் குணமாகியவர்களை முகாமில் தங்க வைக்காமல் அவர்களை வீட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும். மருத்துவ பரிசோதனை மிக விரைவாக தெரிவிக்கப்படவேண்டும்.

 

நோய்த்தொற்று இல்லாதவர்கள் அவரவர் வீடுகளுக்குச் சென்று 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்வதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும். மருத்துவமனைக்கு சென்று நோய் குணமானவர்களை, தனிமை முகாமிற்கு கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும். பரிசோதனை முடிவுகள் வருவதற்கு காலதாமதம் ஆவதால் இங்கு நோய் தொற்று உள்ளவர்களிடமிருந்து, நோய்த்தொற்று இல்லாதவர்களுக்கு இந்நோய் பரவ நேரும். ஆக இந்த குறைபாடுகள் எல்லாம் உடனடியாக சரி செய்ய வேண்டும்” என்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பரிசோதனை நோயாளிகள் கோரிக்கை வைத்தனர்.

 

பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், இவை அனைத்தும் உடனடியாக சரி செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் சிறப்பு முகாமிற்கு சென்றனர்.

 

பரிசோதனை முகாமில் இருந்து வெளியே வந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அவ்வழியாக டூவீலர், கார் போன்ற வாகனங்களில் சென்ற பொதுமக்கள் அலறியடித்து கொண்டு ஓடினார்கள். இதனால் அங்கு ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மதுபோதையில் பேருந்தின் கண்ணாடி உடைப்பு; போலீசார் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Bus window breaking in drunkenness; Police investigation

உளுந்தூர்பேட்டை அருகே மது போதையில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் கண்ணாடியை இரண்டு இளைஞர்கள் உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒலையனூர், குணமங்கலம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் உளுந்தூர்பேட்டை சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது வாகனத்தில் யார் முந்தி செல்வது என்பதில் போட்டி ஏற்பட்டுள்ளது. மது போதையில் இருந்த இரண்டு இளைஞர்களும் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு சென்றனர். அப்போது அவர்கள் இருவரும் ஒலையனூர் பேருந்து நிலையம் அருகே சென்ற போது, போதை ஆசாமி இருவருக்கும் வாக்கு வாதம் முற்றியுள்ளது. இதனால் இளைஞர்கள் இருவரும் மோதிக்கொண்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த எஸ்சிடிசி பேருந்தை தடுத்து நிறுத்திவிட்டு மோதலில் ஈடுபட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுனர் அந்தப் பேருந்தை அங்கிருந்து எடுத்துச் செல்ல முயன்றுள்ளார். உடனே அந்தப் போதை ஆசாமிகள் இருவரும் அங்கிருந்த கற்களை எடுத்து பேருந்தின் முன் கண்ணாடியை உடைத்தனர். மேலும் அவர்களுக்குள் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதில் மூன்று இளைஞர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் இருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி வந்த அந்தப் பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டதால் பேருந்து அங்கேயே நிறுத்தப்பட்டது.

இது தொடர்பாக குணமங்கலம், ஒலையனூர் பகுதிகளில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது போதையில் சாலையில் சென்ற பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.