Advertisment

சிங்கப்பூரில் இருந்து ஆபத்தான நிலையில் திருச்சி வந்த நோயாளி!!

Patient who came to Trichy in a dangerous condition from Singapore

Advertisment

சிங்கப்பூரிலிருந்து ஏர் ஆம்புலன்ஸ் விமானம் மூலம் திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்குத்தீவிர சிகிச்சைக்காக பக்கவாத நோயாளி கொண்டுவரப்பட்டார். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தாலுகா மணல்மேல்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன் (36). இவர் சிங்கப்பூரில் பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது.

இவர் தற்போது பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டதால், உயர் சிறப்பு சிகிச்சைக்காக சிங்கப்பூரில் இருந்து தனியார் ஆம்புலன்ஸ் விமானம் மூலம் நான்கு மணிநேர பயணத்திற்குப் பிறகு திருச்சி விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டார். பின்னர் அங்கிருந்து திருச்சியில் உள்ள காவிரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டு தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

passengers singapore trichy airport
இதையும் படியுங்கள்
Subscribe