Skip to main content

57 மாத சம்பளத்தை உடனே வழங்குக; பாசிக் தொழிலாளர்கள் பட்டை நாம போராட்டம்!

Published on 07/07/2019 | Edited on 07/07/2019

புதுச்சேரியிலுள்ள பாசிக் நிறுவனத்தில் 350  நிரந்தர ஊழியர்கள், 190 தினக்கூலி ஊழியர்கள் எனமொத்தம் 540 பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு கடந்த 57 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை.

இந்நிலையில் அனைத்து ஊழியர்களுக்கும்உடனடியாக சம்பளம் வழங்கவேண்டும்,லாபகரமான தொழில்களை பாசிக் நிறுவனம் தொடர்ந்து நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாசிக் ஊழியர்கள் முன்னேற்ற சங்கம்(ஏ.ஐ.டி.யூ.சி)சார்பில் கடந்த 26-ஆம் தேதி முதல் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

PASIK  Workers protest


தட்டாஞ்சாவடி வேளாண் வளாகத்தில் உள்ளபாசிக் நிறுவன தலைமை அலுவலகம் எதிரில் திரண்ட நுாற்றுக்கணக்கான ஊழியர்கள் முழு சம்பளம் வழங்க வேண்டும், நிலுவை சம்பளத்தை அளிக்க வேண்டும், தினக்கூலி ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பி கடந்த 12  நாட்களாக போராட்டம் நடத்தினர்.

கோரிக்கைகளை வலியுறுத்தி தினமும் ஒரு மணி நேரம் தொடர் தர்ணா நடத்திய தொழிலாளர்கள் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு அரசு துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஊழியர்களின் வாழ்வாதாரத்தைகாத்திட  அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

 

PASIK  Workers protest


ஆனால் கோரிக்கைகள் குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் 12-ஆவது நாளான நேற்று நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் சட்டமன்றம் முன்பு பட்டை நாமம் அணிந்து போராட்டம் நடத்தினர். கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

Next Story

லிஸ்டில் உள்ள 737 பேர்; இன்றே கடைசி நாள்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
737 people on the list; Today is the last day

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

மார்ச் 20 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யக் கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று கடைசி நாளாகும். தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் உட்பட 102 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நிறைவு பெறுகிறது. நாளை வேட்புமனு பரிசீலனை நடைபெறுகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் தமிழ்நாட்டில் இதுவரை 737 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 39 தொகுதிகளில் இதுவரை ஆண்கள் 628 பேரும், பெண்கள் 109 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.