சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் நாளை மறுநாள் காலை 10 மணிக்கு ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்களை நடிகர் ரஜினிகாந்த் சந்திக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Advertisment

party announcement - Rajinikanth meets executives day after tomorrow

அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக ரஜினிகாந்த் தெரிவித்திருக்கும் நிலையில் ஒரு வருடத்திற்கு பிறகு தற்போது மூன்றாவது முறையாக ரஜினிமக்கள் மன்றத்தின்மாவட்ட செயலாளர்களை சந்திக்க இருக்கிறார் ரஜினிகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சந்திப்பில் முக்கிய ஆலோசனை நடைபெற இருப்பதாகவும், அரசியல் கட்சி தொடங்குவது பற்றிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருக்கிறது என்ற தகவலும் வெளியாகி உள்ளது.