ADVERTISEMENT

டெல்டா விவசாயிகளுடன் கைகோர்ப்போம் - இயக்குனர் பாரதிராஜா

09:49 AM Apr 27, 2018 | kalaimohan

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை எங்களின் போராட்டம் தொடரும் என திரைப்பட இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

சென்னை தேனாம்பேட்டையில் செய்தியர்களை சந்தித்து பேசிய அவர்,

ADVERTISEMENT

தமிழக மக்களின் மீதும் விவசாயிகள மீதும் மத்திய அரசுக்கு அக்கறையிருந்தால் கண்டிப்பாக வரும் மே 3ஆம் தேதி வரவிருக்கும் தீர்ப்பு நல்லதாக இருக்கும் அப்படி இல்லாவிட்டால் கண்டிப்பாக தங்களின் போராட்டம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரைத்தொடரும். காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கும் எங்கள் டெல்டா பகுதியை காப்பதற்கும் கடைசிவரை போராடுவோம்.

திருச்சி கல்லணையில் டெல்டா விவசாயிகள் முன்னெடுக்கும் போராட்டத்தில் தாங்களும் பங்கேற்க போகிறோம் எனவும் கூறினார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT