Skip to main content

தவறவிட்ட குழந்தையை திரும்ப பெற தவிக்கும் பெற்றோர்!  

Published on 08/02/2022 | Edited on 08/02/2022

 

Parents who went in search of a lost child!

 

சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்தவர் கவியரசு(28). இவர், அதே பகுதியைச் சேர்ந்த கணவரை இழந்த விமலா(32) எனும் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு வேலூரில் விமலா தள்ளுவண்டி கடைப் போட்டு தின்பண்டங்கள் விற்பனை செய்து வந்துள்ளார். கடந்த 5ம் தேதி கணவர் கவியரசுவிடம் விமலா வியாபாரத்திற்கு முதலீடு செய்ய பணம் கேட்டுள்ளார். இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு நடந்துள்ளது. 

 

அதில் கோபமுற்ற விமலா, ‘குழந்தையை மட்டும் தூக்கிக் கொண்டு போ’ என்று கணவரிடம் கோபமாக கூறியுள்ளார். கவியரசும் 6 மாத குழந்தையை தூக்கிக்கொண்டு அன்று இரவு 11 மணி அளவில் புதுச்சேரி நோக்கி பஸ்ஸில் வந்துள்ளார். அவர் வந்த பஸ் கல்பாக்கம் பஸ் நிலையத்தில் சிறிது நேரம் நின்றுள்ளது. அப்போது பஸ்சில் பயணம் செய்த (சரஸ்வதி) ஒரு பெண்ணிடம் குழந்தையை கொடுத்துவிட்டு இயற்கை உபாதை கழித்துவிட்டு வருவதாகக் கூறிச் சென்றுள்ளார் கவியரசு. 

 

திரும்பிவந்து பஸ்ஸில் ஏறுவதற்குள் அந்த பஸ் புறப்பட்டு சென்றுவிட்டது. குழந்தையை பெண் பயணியிடம் கொடுத்துவிட்டு தவித்த கவியரசு, அதன் பிறகு வேறு ஒரு பஸ்ஸை பிடித்து புதுச்சேரி பஸ் நிலையம் வந்து பல்வேறு இடங்களில் குழந்தையை தேடி அலைந்துள்ளார். குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து தனது மனைவி விமலாவிடம் சம்பவத்தை கூறி அழுதுள்ளார். 

 

இந்தநிலையில் பஸ்ஸில் குழந்தையை தவறு விட்டுவிட்டு சென்ற நபரை போலீசார் தேடி வருவதாக பத்திரிகை செய்தி வெளிவந்தது. இதை அறிந்த கவியரசு, அவரது மனைவி விமலா இருவரும் கோட்டக்குப்பம் காவல் நிலையத்துக்குச் சென்று நடந்த சம்பவங்களை கூறி குழந்தையை தருமாறு கேட்டுள்ளனர். குழந்தை உங்களுடையது தான் என்பதற்கான ஆதாரம் என்ன கொண்டு வந்துள்ளீர்கள் என்று போலீசார் கேட்டுள்ளனர். 

 

ஆனால், அவர்கள் இருவரும் ஆதாரம் எதுவும் எடுத்து வராததால், குழந்தையை காவல்துறையினர் தொட்டில் குழந்தை திட்டத்தில் ஒப்படைத்துள்ளனர். மேலும், அவர்களிடம் உங்கள் குழந்தை தான் என்பதற்கு உரிய ஆதாரங்களை எடுத்துச் சென்று மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்து குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறி அனுப்பியுள்ளனர். அதன்படி, அவர்கள் இன்று ஆதாரங்களை எடுத்துக் கொண்டு விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவரை சந்திக்க சென்றனர். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழப்பு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
6-year-old boy lost their live in private college bus crash

நாமக்கல்லில் தனியார் கல்லூரி பேருந்து மோதி ஆறு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஈரோடு சாலையில் உள்ள  தோட்ட வாடி கிராமத்தில் உள்ள பேருந்து நிலைய பகுதியில் கூட்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவர் இருசக்கர வாகனத்தில் தன்னுடைய 6 வயது மகனுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்திற்குப் பின்புறம் வந்த தனியார் கல்லூரி பேருந்து எதிர்பாராத விதமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 6 வயது சிறுவன் தலை நசுங்கி உயிரிழந்தார். தந்தை சதீஷ்குமாரின் கை முறிந்து துண்டானது.

இந்தச் சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்த, உடனடியாக அங்கு வந்த போலீசார் சிறுவனின் உடலைக் கைப்பற்றி  பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்தப் பகுதிகளில் காலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதாகவும், அந்த நேரத்தில் தனியார் பேருந்துகள் மிகுந்த வேகத்துடன் செல்வதால் சாலைத் தடுப்பு, வேகத்தடை ஆகியவற்றை அமைத்துக் கொடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்செங்கோடு காவல் நிலைய போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த குழந்தைக்கு நேர்ந்த சோகம்!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Tragedy of the child who fell into the borehole

மத்திய பிரதேசம் மாநிலம் ரேவா என்ற மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் திறந்தவெளி ஆழ்துளைக் கிணறு ஒன்று அமைக்கட்டுள்ளது. இதில் 6 வயது குழந்தை ஒன்று கடந்த 12 ஆம் தேதி (12.04.2024) தவறி விழுந்தது. இந்த குழந்தையை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. அப்போது ரேவா மாவட்ட ஆட்சியர் பிரதிபா பால் கூறுகையில், ‘ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். ஆழ்துளைக் கிணற்றின் ஆழம் 70 அடி ஆகும். 50 அடி ஆழம் தோண்டிய பின் கேமரா மூலம் கிடைத்த தகவலின் படி குழந்தை 45 முதல் 50 அடி ஆழத்தில் சிக்கியிருக்கலாம் என தெரிய வருகிறது. தேசிய பேரிடர் மீட்புப்படையினர் குழந்தையை மீட்க கிடைமட்டமாக சுரங்கம் தோண்டி வருகின்றனர்’ எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 6 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். சுமார் 70 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் 40 அடி ஆழத்தில் சிக்கியிருந்த சிறுவனை மீட்கும் பணியில் இரண்டு நாட்களாக தீயணைப்பு துறை, பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டனர். இருப்பினும் உயிரிழந்த நிலையில் சிறுவனின் உடல் சடலமாக நேற்று (14.04.2024) மீட்கப்பட்டது.

இது குறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விவேக் லால் சிங் கூறுகையில், “தேசிய பேரிடர் மீட்புப்படையினர், போலீஸ், உள்ளூர் மக்கள் மற்றும் உள்ளூர் நிர்வாகத்தினர் ஆகியோர் சிறுவனை மீட்க சுமார் 45 மணிநேரம் கடுமையாக உழைத்தோம். ஆனால் எங்களால் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.