Advertisment

இளைஞனை நம்பி மகளை அனுப்பிய பெற்றோர்... கூட்டுப்பாலியல் வன்கொடுமையால் பதற்றம்! 

Parents who sent their daughter to trust the young man ... Tension in village

பெற்றோரால் நம்பி இளைஞருடன் அனுப்பப்பட்ட சிறுமி கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதை தொடர்ந்து சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய இளைஞர்களைச்சிறுமியின்குடும்பத்தாரும், ஊராரும்அடித்து கொலை செய்த சம்பவம் ஜார்கண்டில் நிகழ்ந்துள்ளது.

Advertisment

ஜார்கண்ட் மாநிலத்தில் கும்ளா என்ற பகுதியில் வசித்து வந்த குடும்பத்தார் பக்கத்து ஊரில் நிகழ்ந்த திருமணம் ஒன்றிற்கு கடந்த ஜூன் 8 ஆம் தேதி சென்ற நிலையில் திரும்ப வந்து கொண்டிருக்கும் பொழுது பேருந்து கிடைக்காததால் நடந்து வந்துள்ளனர். அப்பொழுது தன்னுடன் வந்த சிறுமியால் அதிக தூரம் நடக்க முடியாது என்பதால் அந்த வழியாக பைக்கில் வந்த சுனில் ஓரான் என்ற இளைஞனை நம்பி சிறுமியை வீட்டில் விடுமாறு அனுப்பிவைத்தனர். ஆனால் பெற்றோர்களின் நம்பிக்கைக்கு நேர்மாறாக சுனில் ஓரான் அவனது நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.

Advertisment

இதுகுறித்து தகவலறிந்த பெற்றோர் அக்கிராம மக்களின் உதவியுடன் சுனில் ஓரான் மற்றும் அவனது நண்பனை பிடித்து சரமாரியாக தாக்கினர். அதில் சுனில் ஓரான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். அதிக காயங்களுடன் மீட்கப்பட்ட அவனது கூட்டாளி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். இந்த சம்பவத்தால் அந்த கிராமத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அந்த இளைஞனின் பைக்கை அடித்து உடைத்து தீ வைத்து எரித்த காட்சிகள் வைரலாகி வருகிறது.

incident villagers jharkand
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe