Skip to main content

இளைஞனை நம்பி மகளை அனுப்பிய பெற்றோர்... கூட்டுப்பாலியல் வன்கொடுமையால் பதற்றம்! 

Published on 10/06/2022 | Edited on 10/06/2022

 

Parents who sent their daughter to trust the young man ... Tension in village

 

பெற்றோரால் நம்பி இளைஞருடன் அனுப்பப்பட்ட சிறுமி கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதை தொடர்ந்து சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய இளைஞர்களைச் சிறுமியின் குடும்பத்தாரும், ஊராரும் அடித்து கொலை செய்த சம்பவம் ஜார்கண்டில் நிகழ்ந்துள்ளது.

 

ஜார்கண்ட் மாநிலத்தில் கும்ளா என்ற பகுதியில் வசித்து வந்த குடும்பத்தார் பக்கத்து ஊரில் நிகழ்ந்த திருமணம் ஒன்றிற்கு கடந்த ஜூன் 8 ஆம் தேதி சென்ற நிலையில் திரும்ப வந்து கொண்டிருக்கும் பொழுது பேருந்து கிடைக்காததால் நடந்து வந்துள்ளனர். அப்பொழுது தன்னுடன் வந்த சிறுமியால் அதிக தூரம் நடக்க முடியாது என்பதால் அந்த வழியாக பைக்கில் வந்த சுனில் ஓரான் என்ற இளைஞனை நம்பி சிறுமியை வீட்டில் விடுமாறு அனுப்பிவைத்தனர். ஆனால் பெற்றோர்களின் நம்பிக்கைக்கு நேர்மாறாக சுனில் ஓரான் அவனது நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.  

 

இதுகுறித்து தகவலறிந்த பெற்றோர் அக்கிராம மக்களின் உதவியுடன் சுனில் ஓரான் மற்றும் அவனது நண்பனை பிடித்து சரமாரியாக தாக்கினர். அதில் சுனில் ஓரான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். அதிக காயங்களுடன் மீட்கப்பட்ட அவனது கூட்டாளி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். இந்த சம்பவத்தால் அந்த கிராமத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அந்த இளைஞனின் பைக்கை அடித்து உடைத்து தீ வைத்து எரித்த காட்சிகள் வைரலாகி வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உணவு கொடுக்காததால் ஆத்திரம்; மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் எடுத்த விபரீத முடிவு!

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
 The tragic decision taken by the husband by incident his wife for not being given food;

உத்தரப்பிரதேசம் மாநிலம், சீதாபூர் பகுதியைச் சேர்ந்தவர் பரசுராம். இவருக்கு பிரேமா தேவி (28) என்ற மனைவி இருந்தார். பரசுராம், அங்குள்ள பகுதியில் விவசாயம் பார்த்து வருகிறார். இந்த நிலையில், நேற்று (18-03-24) பரசுராமின் மனைவி பிரேமா தேவி கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர், பரசுராமின் வீட்டுக் கதவை உடைத்து பார்த்தபோது, அங்கு பரசுராம் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்ட நிலையில் கிடந்துள்ளார்.

வீட்டில் மர்மமான முறையில் கணவன் மற்றும் மனைவி இருவரும் இறந்ததைக் கண்ட அக்கம்பக்கத்தினர், இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இருவரது உடலையும் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அவர்கள் நடத்திய அந்த விசாரணையில், வழக்கம்போல் விவசாயம் பார்த்து நேற்று மதியம் வீட்டுக்கு வந்த பரசுராம், தனது மனைவி பிரேமா தேவியிடம் சாப்பாடு கேட்டுள்ளார். ஆனால், அந்த நேரத்தில் சாப்பாடு தயாராகவில்லை என்று பிரேமா தேவி கூறியுள்ளார். மேலும், சாப்பாடு தயார் செய்ய நேரம் அதிகமானதால், பரசுராம் கோபமடைந்துள்ளார். இதனால், கணவன் மனைவி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் தகராறாக மாறியுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த பரசுராம், அங்கு இருந்த கத்தியை எடுத்து பிரேமா தேவியை சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த பிரேமா தேவி, ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைக் கண்டு பதற்றமடைந்த பரசுராம், மனைவியைக் கொலை செய்ததற்காக சிறை செல்ல நேரிடுமோ என்று பயந்து வீட்டுக்குள் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது தெரியவந்தது. சாப்பாடு செய்ய நேரம் அதிகமானதால் மனைவியைக் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

இளம்பெண் தற்கொலை; மாமனார், மாமியாரை எரித்துக் கொன்ற உறவினர்கள்!

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
The woman's parents in law were burned to incident by relatives for Teenage incident in u.p

உத்தரப் பிரதேசம் மாநிலம், பிரயாக்ராஜ் பகுதியைச் சேர்ந்தவர் அன்ஷு கேசர்வானி. இவருக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அன்ஷிகா (21) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், திருமணத்திற்குப் பிறகு அன்ஷிகாவிடம், வரதட்சணை கேட்டு அன்ஷு மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுமைப்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. 

இதில் மனமுடைந்து போன அன்ஷிகா, நேற்று (18-03-24) இரவு தனது அறையில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அன்ஷு மற்றும் அவரது குடும்பத்தினர், அன்ஷிகாவின் குடும்பத்தினருக்குத் தகவல் கொடுத்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த அன்ஷிகாவின் பெற்றோர், தங்கள் உறவினர்களுடன் அன்ஷு வீட்டுக்குச் சென்றுள்ளனர். அங்கு சென்ற அவர்கள், அன்ஷிகா குறித்து அன்ஷு குடும்பத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம், ஒரு கட்டத்தில் மோதலாக உருவாகியது. இதில் ஆத்திரமடைந்த அன்ஷிகாவின் உறவினர்கள், அன்ஷுவின் வீட்டிற்குத் தீ வைத்தனர். இதில் வீட்டுக்குள் இருந்த அன்ஷுவின் குடும்பத்தினர் மாட்டிக்கொண்டனர். மேலும், இந்த சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தீப்பற்றி எரிந்த வீட்டில் இருந்த 5 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இருப்பினும், அன்ஷுவின் தந்தை ராஜேந்திர கேசர்வானி (64) மற்றும் தாய் ஷோபா தேவி (62) ஆகியோர் பற்றி எரிந்த தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து, அவர்கள் இருவர் உடலையும் போலீசார் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.