செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி சர்வதேச பள்ளியின் நிறுவனர் சிவசங்கர், ஆன்மீகவாதி என்ற போர்வையில் மாணவிகளைப் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கியது குறித்து அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவிகள் சமூக வலைதளங்களில் பரபரப்பு குற்றச்சாட்டுகளை வைத்துவருகின்றனர். இந்நிலையில், அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது. மேலும், தற்போது இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், அப்பள்ளியில் படித்துவந்த மாணவர்களின் பெற்றோர்கள் தம் பிள்ளைகளின் மாற்றுச்சான்றிதழை வாங்கிச் சென்றனர்.
சிவசங்கர் பாபா பள்ளியிலிருந்து மாற்றுச் சான்றிதழ்களைப் பெற்றுச் செல்லும் பெற்றோர்கள்..!
Advertisment