Skip to main content

மகனின் மருத்துவப் படிப்பு; கண்ணீர் மல்கப் பெற்றோர் மனு

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
Parents petition for return certificate of son studying medicine in Russia

ஈரோடு எஸ்.பி. அலுவலகத்தில் இன்று ஆப்பக்கூடல் அடுத்த ஆ.புதுப்பாளையம் சக்தி நகரைச் சேர்ந்த ராஜேந்திரன்(44) தனது மனைவி தங்கமணியுடன் வந்து எஸ்.பி. அலுவலகத்தில் கண்ணீர் மல்க மனு கொடுத்தார். 

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:- நாங்கள் கூலி வேலை பார்த்து பிழைப்பு நடத்தி வருகிறோம். எங்களுக்கு ஜனார்த்தன் (22) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். எனது மகன் மருத்துவம் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டான். அதற்காக எங்கள் சத்தியை மீறி அவனை மருத்துவம் படிக்க அனுமதித்தோம். இந்நிலையில் அனுமன் தீர்த்தம், ஊத்தங்கரை பகுதியைச் சேர்ந்த கிருபானந்தம் என்பவர் எனது மகனின் நண்பர் மூலம் அறிமுகமாகி எனது மகனை ரஷ்யாவில் மருத்துவம் படிக்க அழைத்துச் செல்வதாகக் கூறினார்.

ஏற்கனவே கிருபானந்தம் இதேபோன்று 20 மாணவர்களை ரஷ்யா அழைத்துச் சென்று மருத்துவப் படிப்புக்கு சேர்த்து உள்ளார். இதற்காக அவர் ஏஜென்ட் போல் செயல்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு எனது மகன் ரஷ்யாவில் மருத்துவ படிப்புக்கு சேர்ந்தான். அதற்கு புரோக்கர் கமிஷனாக அவரிடம் ரூ. 2 லட்சத்து 40 ஆயிரம் கொடுத்தோம். ஆனால் அப்போது கொரோனா காலகட்டம் என்பதால் எனது மகன் ஒரு வருடம் ஆன்லைன் மூலமாக மருத்துவம் படிப்பு படித்தான். அதன் பின்னர் கடந்த 2022 ஆம் ஆண்டு ரஷ்யாவுக்கு மருத்துவம் படிக்கச் சென்றான். அப்போது எனது மகனின் அனைத்து அசல் சான்றிதழ்களை கிருபானந்தம் வைத்துக்கொண்டார்.

அவ்வப்போது அவர் கேட்கும் வங்கிக் கணக்கில் நாங்கள் இதுவரை ரூ.10 லட்சத்திற்கு மேல் அனுப்பி உள்ளோம். இந்நிலையில் தற்போது எனது மகன் ஏப்ரல் மாதம் மருத்துவ தேர்வு எழுத உள்ளார். அதற்காக எனது மகனின் அசல் சான்றிதழை மருத்துவ பல்கலைக்கழகத்தினர் கேட்டுள்ளனர். ஆனால் கிருபானந்தம் அசல் சான்றிதழை கொடுக்காமல் காலம் தாழ்த்தி பணம் பறிக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறார். 

இதுகுறித்து ஏற்கனவே அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம். ஆனால் இதுவரை எந்த ஒரு பதிலும் வரவில்லை. அசல் சான்றிதழ் கொடுத்தால் மட்டுமே எனது மகனால் தேர்வு எழுத முடியும். இதனால் எனது மகன் மன உளைச்சலில் உள்ளான். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

இறந்து கிடந்த ஆண் யானை; வனத்துறையினர் விசாரணை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Forest department investigation


                                கோப்புப்படம் 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி யானைகள் விவசாய தோட்டத்தில் புகுவதும்,  உணவுக்காக சாலையில் உலா வருவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கும்டாபுரம் அருகே ஆண் யானை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டனர். இதுபற்றி தாளவாடி வனச்சரக அலுவலர் சதீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற அதிகாரிகள் கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையில் மருத்துவக் குழுவினர் இறந்த யானையின் உடலை அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்தனர்.

இதில் இறந்த யானைக்கு சுமார் 18 வயது இருக்கும் எனத் தெரிவித்தனர். ஆண் யானையின் தந்தங்கள் இல்லாததால் யானை சுட்டுக் கொல்லப்பட்டதா? அல்லது விஷம் வைத்து கொல்லபட்டதா?  அல்லது இறந்த கிடந்த யானையின் தந்தங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றார்களா? என வனத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் பிரேதப் பரிசோதனை மாதிரிகளையும் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இறந்த யானை உடலை மற்ற வனவிலங்குகளுக்காக வனப்பகுதியில் விட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.