Skip to main content

தாய், தந்தையை இழந்து தவிக்கும் குழந்தைகள்!

Published on 10/07/2021 | Edited on 10/07/2021

 

parents incident childrens tamilnadu government

 

ஒரே நாளில் இரண்டு குடும்பங்களில் பெற்றோரை இழந்து தவித்துக் கொண்டிருக்கும் 5 குழந்தைகள் அரசு உதவிக்காக ஏங்கிக் கொண்டிருக்கின்றனர்.

 

புதுக்கோட்டை மாவட்டம், குளமங்கலம் வடக்கு தொண்டைமான் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவராஜ். இவருக்கு வயது 50. இவர் மர வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி கலையரசி, கடந்த 2013-ஆம் ஆண்டு விட்டு இறந்துவிட்டார். அதன் பிறகு தனது ஒரு பெண் குழந்தை மற்றும் கோபிநாத் (வயது 17) வீரகபிலன் (வயது 15) ஆகியோரை தந்தை சிவராஜ் வளர்த்து வந்தார். 

 

மகள் அரசு கல்லூரியில் எம்.ஏ. ஆங்கிலம் படித்து வரும் நிலையில், கடந்த ஜூலை 6- ஆம் தேதி தனது பிள்ளைகள் ஆதரவில்லாமல் தவிப்பார்கள் என்பதைக் கூட நினைக்காமல் சிவராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இப்போது ஒரு பெண் மற்றும் 2 சிறுவர்களும் (அதில் ஒருவருக்கு மனநிலை சரியில்லை) மனநலம், கண்பார்வை பாதிக்கப்பட்ட நடக்க முடியாத 80 வயது பாட்டியுடன் பாதுகாப்பு இல்லாத பழைய உடைந்த வீட்டில் வசித்து வருகின்றன. 

parents incident childrens tamilnadu government

தாய் இல்லாமல் தந்தை பாதுகாப்பில் இருந்த குழந்தைகள் தற்போது அவரையும் இழந்து படிப்பும், வாழ்க்கையும் கேள்விக் குறியாக நிர்கதியாய் நிற்கிறார்கள். இதில் சிவராஜின் மகள் பட்டப்படிப்பு படித்து வருவதால், அவருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கினால், தனது இரு தம்பிகளையும் படிக்க வைப்பதுடன் வயதான பாட்டியையும் கவனித்துக் கொள்வார்.

 

அதேபோல் கொத்தமங்கலம் சுண்டாங்கிவலசைக் கிராமத்தைச் சேர்ந்த இளஞ்செழியன் பூக்கடை நடத்தி வந்தார். அவரது மனைவி ராசாத்தி சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் தனது மகன்கள் பிரகாஷ் (வயது 17), மதன் (வயது 12) ஆகிய இருவருக்கும் அனைத்து உதவிகளையும் செய்து வளர்த்து வந்தார். ஆனால் கடந்த ஜூலை 6- ஆம் தேதி இளஞ்செழியனும் இறந்துவிட்ட நிலையில், அவரது மகன்கள் இருவரும் மனமுடைந்துவிட்டனர். சிறுவயதிலேயே தாய், தநதையை இழந்து தவிக்கும் இவர்களுக்கு அரசு உதவிகள் செய்ய வேண்டும்" என்கிறார்கள் அப்பகுதி மக்கள். 

 

இப்படி வெவ்வேறு காரணங்களால் தாய், தந்தையை இழந்து ஆதரவின்றித் தவிக்கும் குழந்தைகளுக்கு புதிய அரசு அடையாளம் கண்டு உதவிகள் செய்திட வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.