Skip to main content

தாய், தந்தையை இழந்து தவிக்கும் குழந்தைகள்!

Published on 10/07/2021 | Edited on 10/07/2021

 

parents incident childrens tamilnadu government

 

ஒரே நாளில் இரண்டு குடும்பங்களில் பெற்றோரை இழந்து தவித்துக் கொண்டிருக்கும் 5 குழந்தைகள் அரசு உதவிக்காக ஏங்கிக் கொண்டிருக்கின்றனர்.

 

புதுக்கோட்டை மாவட்டம், குளமங்கலம் வடக்கு தொண்டைமான் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவராஜ். இவருக்கு வயது 50. இவர் மர வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி கலையரசி, கடந்த 2013-ஆம் ஆண்டு விட்டு இறந்துவிட்டார். அதன் பிறகு தனது ஒரு பெண் குழந்தை மற்றும் கோபிநாத் (வயது 17) வீரகபிலன் (வயது 15) ஆகியோரை தந்தை சிவராஜ் வளர்த்து வந்தார். 

 

மகள் அரசு கல்லூரியில் எம்.ஏ. ஆங்கிலம் படித்து வரும் நிலையில், கடந்த ஜூலை 6- ஆம் தேதி தனது பிள்ளைகள் ஆதரவில்லாமல் தவிப்பார்கள் என்பதைக் கூட நினைக்காமல் சிவராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இப்போது ஒரு பெண் மற்றும் 2 சிறுவர்களும் (அதில் ஒருவருக்கு மனநிலை சரியில்லை) மனநலம், கண்பார்வை பாதிக்கப்பட்ட நடக்க முடியாத 80 வயது பாட்டியுடன் பாதுகாப்பு இல்லாத பழைய உடைந்த வீட்டில் வசித்து வருகின்றன. 

parents incident childrens tamilnadu government

தாய் இல்லாமல் தந்தை பாதுகாப்பில் இருந்த குழந்தைகள் தற்போது அவரையும் இழந்து படிப்பும், வாழ்க்கையும் கேள்விக் குறியாக நிர்கதியாய் நிற்கிறார்கள். இதில் சிவராஜின் மகள் பட்டப்படிப்பு படித்து வருவதால், அவருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கினால், தனது இரு தம்பிகளையும் படிக்க வைப்பதுடன் வயதான பாட்டியையும் கவனித்துக் கொள்வார்.

 

அதேபோல் கொத்தமங்கலம் சுண்டாங்கிவலசைக் கிராமத்தைச் சேர்ந்த இளஞ்செழியன் பூக்கடை நடத்தி வந்தார். அவரது மனைவி ராசாத்தி சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் தனது மகன்கள் பிரகாஷ் (வயது 17), மதன் (வயது 12) ஆகிய இருவருக்கும் அனைத்து உதவிகளையும் செய்து வளர்த்து வந்தார். ஆனால் கடந்த ஜூலை 6- ஆம் தேதி இளஞ்செழியனும் இறந்துவிட்ட நிலையில், அவரது மகன்கள் இருவரும் மனமுடைந்துவிட்டனர். சிறுவயதிலேயே தாய், தநதையை இழந்து தவிக்கும் இவர்களுக்கு அரசு உதவிகள் செய்ய வேண்டும்" என்கிறார்கள் அப்பகுதி மக்கள். 

 

இப்படி வெவ்வேறு காரணங்களால் தாய், தந்தையை இழந்து ஆதரவின்றித் தவிக்கும் குழந்தைகளுக்கு புதிய அரசு அடையாளம் கண்டு உதவிகள் செய்திட வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

18 மாவோயிஸ்டுகள் பலி; சத்தீஸ்கரில் பரபரப்பு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் கன்கர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் மொத்தமாக 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மொத்தமாக 18 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், மெஷின் கன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒரே ஒரு எல்லை பாதுகாப்பு வீரரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பதாகவும் ஆனால் உயிருக்கு எந்தவிதமான சேதம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்திற்கு முன்பாக நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 18 மாவோயிஸ்டுகள் கொலை செய்யப்பட்டிருப்பது முக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.  நக்சலைட்டுகள் ஆதிக்கம்  அதிகம் இருக்கும் சத்தீஸ்கரில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.