Skip to main content

திருநங்கைக்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்தி பெற்றோர் நெகிழ்ச்சி! 

Published on 02/03/2022 | Edited on 02/03/2022

 

Parents accepted their  transgender son

 

இயற்கையான பாலின மாறுதல்களுக்கு உள்ளாகுபவர்களை பொது சமூகம் பெரும்பாலும் விலக்கி வைத்து விடுகிறது. அப்படி பாலின மாற்றம் ஏற்படும் திருநங்கைகள், மூத்த திருநங்கைகளிடம் தஞ்சம் அடைந்துவிடுகின்றனர். அவர்கள், தங்கள் குடும்பத்தை பற்றி யாரிடமும் தெரிவிப்பதில்லை. அதேபோன்று, அந்த நபர் குறித்த தகவலையும் குடும்பத்தார் தெரிவிப்பதில்லை.  ஆனால் தற்காலத்தில் சமூகத்திலும், மக்களிடத்திலும் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு மற்றும் மனமாற்றத்தால் திருநங்கைகளுக்கான குடும்ப அங்கீகாரம் கிடைக்க தொடங்கி இருக்கிறது. அந்த வகையில் திருநங்கை ஒருவரை மங்கையாக அங்கீகரித்து அவரது குடும்பத்தினரே முன்னின்று மஞ்சள் நீராட்டு விழா நடத்தி உள்ளனர்.

 

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் இந்திரா நகரில் வசிக்கும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் சுமைதூக்கும் தொழிலாளியாக வேலை பார்க்கும் கொளஞ்சி, விருத்தாசலம் நகராட்சி அலுவலகத்தில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வரும் அமுதா தம்பதியினரின் மகன் நிஷாந்த் (21). டிப்ளமோ கேட்டரிங் படிப்பை முடித்துள்ளார். பருவ வயது வர வர இவருக்கு உடலில் பாலியல் செயல்பாடுகள் மாற மாறத்தான் ஒரு திருநங்கை என்பதை அவர் உணர்ந்துள்ளார். அதையடுத்து வீட்டை விட்டு வெளியேறி திருநங்கைகளிடம் தஞ்சமடைந்த பின் தனது பெயரை நிஷா என மாற்றிக் கொண்டார். இந்நிலையில் நிஷாவின் உணர்வுக்கு மதிப்பளித்து அவரது உடலியல் மாற்றத்தை உணர்ந்த அவரது பெற்றோர் வீட்டுக்கு அழைத்தனர். பின்னர் அவருக்கு பாலியல் மாற்று அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது முழுமையான திருநங்கையாக நிஷா மாறியுள்ளார். இந்த நிலையில் அவருக்கு நேற்று மஞ்சள் நீராட்டு விழா நடத்தினர். இந்த நிகழ்வில் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் அக்கம் பக்கத்தினர் நிஷா உடன் பயின்ற பள்ளி நண்பர்கள் என பலரும் கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்து விருந்து உபசரிப்பில் பங்கேற்றனர். 

 

பொதுவாக ஒருவர் பாலியல் அறுவை சிகிச்சை மூலம் திருநங்கையாக மாறிய பின் மூத்த திருநங்கைகளின் இருப்பிடத்திற்குச் சென்று அங்கு ஐக்கியமாகி விடுவது வழக்கம். அந்த நபருக்கு மூத்த திருநங்கைகள் மஞ்சள் நீராட்டு விழா நடத்தி அவரை பெண்ணாக அங்கீகரிப்பார்கள். ஆனால் முதன்முறையாக ஒரு திருநங்கைக்கு குடும்பத்தினரே பெண்ணாக அங்கீகரித்து மஞ்சள் நீராட்டு விழா செய்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்கு இயந்திரத்தில் கோளாறு; இன்னும் தொடங்கப்படாத வாக்குப்பதிவு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Voting machines malfunction in 10 polling stations in Cuddalore
கோப்புப்படம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூரில்  உள்ள 10  வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதனால் கடந்த ஒரு மணி நேரத்திக்கும் மேலாக அப்பகுதியில் வாக்குப் பதிவு  தொடங்கப்படாமல் இருக்கிறது. தேர்தல் அதிகாரிகள் மாற்று வாக்குப் பதிவு எந்திரம் மூலம் வாக்குப் பதிவு தொடங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தாமதமாகும் வாக்குச்சாவடியில் மக்கள் தங்களது ஜனநாயக கடமையாற்ற நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு தொடங்கப்படாமல் இருப்பதால் மாலை ஒரு மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்படுமா என்பது குறித்து தேர்தல் தலைமை அதிகாரி தெரிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.