Skip to main content

சாவுக்கு பயப்படவில்லை என் கடமை ஒன்று பாக்கி உள்ளது.... 

Published on 26/10/2019 | Edited on 26/10/2019

தூள் படத்தில் தூள் கிளப்பிய பறவை முனியம்மா தோரனை, கோவில், அஜித்துடன் வீரம், ராஜாதிராஜா, மான் கராத்தே, என 50 க்கு மேற்பட்ட தமிழ் சினிமாவில் அனைத்து முன்னனி நடிகர்களோடும் நடித்துவிட்டார். 


"சிங்கம் போல நடந்துவர்றான் என் செல்ல பேரான்டி.".என எட்டு கட்டையில் பாடிய பறவை முனியம்மா கயித்து கட்டிலில் தன் கடைசி மூச்சை விடுவதற்குள் தன் ஒரே செல்ல மாற்றுதிறனாளி மகன் தென்றலுக்கு ஏதாவது செஞ்சிட்டு போயிடனும் கடைசி நிமிடத்திலும் தன்னோடு நடிச்ச பிரபலங்கள் கைகொடுக்க மாட்டார்களா? தன் மகனைன் எதிர்காலத்தை நினைத்து தன் நெஞ்சுகுழியிலேயே வைத்திருக்கும் ”பறவை முனியம்மாவை சந்தித்தோம்... 

"2016ல் என் கணவர் வெள்ளைசாமி இறந்தபிறகு நடிக்க பிடிக்கவில்லை அந்த வருடம் தான் எனக்கு கலைமாமணி விருது கொடுத்தார்கள். அதற்க்கு பிறகு உடல் நிலை சரியில்லாமல் போகவும் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா வைப்பு தொகையாக 6 லட்சம் என் பெயரில் போட்டு அதிலிருந்து மாதம் மாதம் ஒரு தொகையை எடுத்து செலவு செய்து வந்தேன். தற்போது மீண்டும் உடல்நிலை மிக மோசமாகி கிட்னி பழுதடைந்து நுரையீரலில் நீர்கோர்த்து மூச்சுவிடமுடியாமல் கஷ்டபடுகிறேன் தம்பி. எனக்கு சாவபத்தி பயமில்லை என் மூன்று மகள்களை கரையேற்றிவிட்டேன் ஆனால் ஒரே ஒரு மனகுறைதான் என் மகன் மாற்றுதிறனாளி அவனை நினைத்தால்தான் கஷ்டமா இருக்கு. போனமுறை நடிகர் தனுஷ், சிவகார்த்திகேயன் போன்றோர் மருத்துவ செலவு செய்தார்கள். இந்த முறை எனக்கு எதுவும் வேண்டாம் தம்பி இப்ப 81 வயசாகிவிட்டது என் உயிருக்கு உயிரான கணவரே போயிட்டாரு இனி நான் இருந்து என்ன செய்யபோறேன். 
 

 

paravai muniyamma interview


என் முன்னேற்றத்தில் 100% பங்குகெடுத்தவர் அவர் தான் நாங்க இரண்டு பேரும் ஊர் ஊராக சென்று கோவில் திருவிழா என்று எந்த மேடையிலும் சான்ஸ் கேட்டு என்னை பாடவைத்தார். அப்புறம் இதுவரை 50 திரைபடங்கள் 2000 மேடைகளில் பாடல்கள் பாடி மிக பிரபலமாகிவிட்டேன் மற்றபடி என் பெண் பிள்ளைகளை கரையேற்றிவிட்டேன், கடைசியா என் செல்ல மகனை விட்டு போகிறேன் அவனுக்கு ஒன்றும் தெரியாது சூதுவாது தெரியாமல் வளர்த்துவிட்டேன் அதை நினைத்தால்தான் கவலையா இருக்கு. மாற்று திறனாளி அவனுக்கு என் பணத்தை அவனுக்கு வரும்படி செய்து கொடுத்தால் மட்டும் போதும் அத பார்த்துட்டு கண்ணை மூடுவேன் என்று அழுதார் பறவை முனியம்மா... 
                                                 

சார்ந்த செய்திகள்

Next Story

விஜயகாந்த்தின் மகனை இயக்கும் சிவகார்த்திகேயன் பட இயக்குநர்!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
 விஜயகாந்தின் மகனை இயக்கும் சிவகார்த்திகேயன் பட இயக்குநர்!

இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் மற்றும் சூரி நடிப்பில் உருவான படம் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’. கடந்த 2013ஆம் ஆண்டில், காமெடி ஜானரில் வெளிவந்த இப்படம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்தின் மூலம், ரசிகர்களை கவர்ந்த பொன்ராம், அடுத்து அதே கூட்டணியில் ‘ரஜினிமுருகன்’ படத்தை இயக்கினார். மிகப்பெரிய வெற்றி பெற்ற இப்படம், சிவகார்த்திகேயனுக்கும், பொன்ராமுக்கும் திருப்புமுனையாக இருந்தது. 

இதனை தொடர்ந்து, மூன்றாவது முறையாக சிவகார்த்திகேயனை வைத்து ‘சீமராஜா’ படத்தை பொன்ராம் இயக்கினார். வெற்றி கூட்டணி மூன்றாவது முறை இணைந்திருந்ததால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இந்த படம், எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் படுதோல்வியை அடைந்தது. அதையடுத்து, பொன்ராம் இயக்கிய எம்.ஜி.ஆர் மகன் மற்றும் டி.எஸ்.பி ஆகிய இரு படங்களும் படுதோல்விப் படங்களாக அமைந்தன. அடுத்தடுத்து தோல்விகள் காரணமாக, முன்னணி நடிகர்களுடன் பொன்ராம் இணையமுடியாத சூழ்நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில், ‘சகாப்தம்’, மதுரவீரன் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்த விஜயகாந்த்தின் மகன் சண்முகபாண்டியனை வைத்து பொன்ராம் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. சண்முகபாண்டியன், தற்போது ‘படை தலைவன்’ படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

‘பிரேமலு’ படத்தைப் பாராட்டிய முன்னணி தமிழ் நடிகர்!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
The leading Tamil actor praised the film 'Premalu'

சமீபத்தில் வெளியான மலையாளப் படங்களான மஞ்சும்மல் பாய்ஸ், பிரேமலு, பிரமயுகம் போன்ற படங்கள் தமிழ் ரசிகர்கர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது. 

இதில், ‘பிரேமலு’ திரைப்படத்தை கிறிஸ் ஏ.டி. இயக்கியிருந்தார்.  நஸ்லன் கே.கஃபூர், மமிதா பைஜு, ஷ்யாம் மோகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான இப்படம், கடந்த பிப்ரவரி மாதம் 9 ஆம் தேதி வெளியானது. இப்படத்தை ஃபஹத் ஃபாசில், திலீஷ் போத்தன் மற்றும் ஷ்யாம் புஷ்கரன் ஆகிய நான்கு நடிகர்கள் தயாரித்திருந்தனர். விஷ்ணு விஜய் இசைப் பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருவதால், தமிழ் மொழியில் டப் செய்யப்பட்டு கடந்த 15 ஆம் தேதி தமிழகத்தில் வெளியாகி, தமிழிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 

ரூ.3 கோடி பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்த படம், ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் சாதனை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம், அதிக வசூல் செய்யப்பட்ட மலையாள சினிமா வரிசையில் ‘பிரேமலு’ படம் இடம்பெற்றுள்ளது.

The leading Tamil actor praised the film 'Premalu'

இந்த நிலையில், ‘பிரேமலு’ படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டியுள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்ட சிவகார்த்திகேயன், “அழகான பொழுதுபோக்கு நிறைந்த படத்தை கொடுத்ததற்காக ‘பிரேமலு’ படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.