Skip to main content

சேலத்தில் வந்திறங்கிய துணை ராணுவம்; தேர்தல் பாதுகாப்பு பணிகள் ஜரூர்!

Published on 01/03/2021 | Edited on 01/03/2021

 

Paramilitary landed at Salem; Election security missions must!

 

சட்டமன்றத் தேர்தல் பாதுகாப்புப் பணிகளுக்காக சிஐஎஸ்எப் எனப்படும் துணை ராணுவ வீரர்கள் 189 பேர் சேலத்திற்கு வந்திறங்கியுள்ளனர். தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி, பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட துணை ராணுவ வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

 

அதன்படி, சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட, சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து, ஞாயிற்றுக்கிழமை (பிப். 28) அதிகாலையில், தனி ரயில் மூலம் மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் (சிஐஎஸ்எப்) இரண்டு கம்பெனி கொண்ட 189 போலீசார் சேலம் வந்து சேர்ந்தனர். சேலம் ரயில் நிலையத்தில் வந்திறங்கிய அவர்களை மாவட்ட, மாநகர காவல்துறையினர் வரவேற்றனர்.

 

சிஐஎஸ்எப் வீரர்கள், எஸ்.பி. சிவக்குமார் தலைமையில் வந்துள்ளனர். இந்தக் குழுவில் உதவி கமிஷனர் ராகுல் ராய், 4 ஆய்வாளர்கள், 183 வீரர்கள் அடங்கியுள்ளனர். இவர்கள் இரண்டு குழுவாகப் பிரிக்கப்பட்டு சேலம் மாநகர பகுதிக்கும், மாவட்ட பகுதிக்கும் தனித்தனியாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

 

சேலம் மாவட்ட பகுதிக்கு 91 வீரர்கள் ஒதுக்கப்பட்டுள்ளனர். அவர்களை, ஆட்டையாம்பட்டி காவல்நிலைய எஸ்.ஐ. இலியாஸ் அழைத்துச் சென்றார். அவர்களுக்கு, ஓமலூர் அருகில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சேலம் மாநகர பகுதிகளில் 92 வீரர்களுக்குப் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்களை மாநகரக் காவல்துறையினர் அழைத்துச்சென்று, லைன்மேடு காவலர் சமுதாயக் கூடத்தில் தங்க வைத்துள்ளனர். இவர்களுக்கு சோதனைச்சாவடிகள், பறக்கும் படைகள் ஆகியவற்றில் பணி ஒதுக்கீடு வழங்கப்படும்

 

சேலம் மாவட்டத்தில், திங்கள்கிழமை (மார்ச் 01) முதல் புதிதாக சில இடங்களில் நிரந்தர மற்றும் தற்காலிக சோதனைச்சாவடிகள் ஏற்படுத்தப்பட உள்ளதாகவும், அவற்றில் துணை ராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர் என்றும் காவல்துறையினர் கூறினர். தேர்தல் நெருக்கத்தில் மேலும் சில கம்பெனி வீரர்கள் கூடுதலாக வரவழைக்கப்பட உள்ளதாக தேர்தல் அதிகாரிகள் கூறுகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எதிரொலித்த அதிருப்திகள்; வேங்கை வயல், பரந்தூரில் பதிவான வாக்குகள் எத்தனை தெரியுமா?

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Dissatisfaction echoed; Do you know how many votes were cast in Vengai vayal, Parantur?

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்த தேர்தலில் சில கிராமங்கள் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக முன்னரே பகிரங்கமாக அறிவித்திருந்தது. குறிப்பாக புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டது இந்திய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. தற்பொழுது வரை இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு தீர்வு கிடைக்காததால் தேர்தலை புறக்கணிக்க இருப்பதாக வேங்கைவயல் கிராம மக்கள் அறிவித்திருந்தனர். மொத்தம் 561 வாக்காளர்களைக் கொண்ட வேங்கை வயலில் இறையூர் கிராமத்தைச் சேர்ந்த எட்டு பேர் மட்டுமே வாக்குகளை பதிவு செய்துள்ளனர். வேங்கைவயல், இறையூர் ஆகிய இரண்டு கிராமங்களை சேர்ந்த மக்களிடமும் தொடர்ந்து அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தியும் கிராம மக்கள் யாரும் வாக்களிக்க முன்வரவில்லை.

அதேபோல காஞ்சிபுரம் பரந்தூரில் விமான நிலையத்திற்கு நிலம் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பரந்தூர் மற்றும் ஏகனாபுரம் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்களும் தேர்தலை புறக்கணிக்கும் முடிவை எடுத்திருந்தனர். இந்நிலையில் ஏகனாபுரத்தில் தற்பொழுது வரை 17 ஓட்டுகள் மட்டுமே பதிவாகியுள்ளது. மக்களவைத் தேர்தலில் முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் தமிழக மற்றும் புதுச்சேரியில் வாக்களிக்க இன்னும் 30 நிமிடங்கள் மட்டுமே எஞ்சியுள்ளது என்பது குறிப்பிடத் தகுந்தது. தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்த வேங்கை வயல் மக்கள்  இறுதிக்கட்டத்தில் தற்போது திடீரென வாக்களிக்க திரண்டுள்ளததால் வாக்குசாவடி பரபரப்பை அடைந்துள்ளது. 

Next Story

பாஜக-விசிக மோதல்; ஒருவருக்கு மண்டை உடைப்பு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
BJP-vck clash; One suffered a fractured skull

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. மோதலில் காயமடைந்த அருண், அஜித் ,செல்வகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.