/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/01 art img police siren 1_33.jpg)
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் 9 ஆம் வகுப்பு படித்து வரும் பள்ளி மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக கூறி பரமக்குடிமகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் பள்ளி மாணவியிடம் நடத்திய ரகசிய விசாரணையில் பள்ளி படிப்புக்கு உதவி செய்வதாக கூறி சிலர் பாலியல் வன்கொடுமை செய்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இதனைத்தொடர்ந்து மேலும் தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார், பரமக்குடி 3 வது வார்டு கவுன்சிலரும், பரமக்குடி அதிமுக நகர அவை தலைவருமானசிகாமணி, ஜவுளி நிறுவன உரிமையாளர் ராஜா முகமது, மறைத் தமிழர் சேனை நிறுவனர் புதுமலர் பிரபாகர்ஆகியோர் போக்ஸோசட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த சம்பவத்தில்தொடர்புடைய உமா மற்றும் கயல்விழிஆகியோரையும் போலீசார் போக்சோசட்டத்தின்கீழ் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 5 பேரும் படிப்புக்கு உதவி செய்வதாக கூறிஏழை சிறுமிகளிடம் அத்துமீறியதுதெரியவந்துள்ளது. மேலும் இதில் முன்னாள் அமைச்சர் ஒருவரின் உறவினரும்சம்பந்தப்பட்டு இருப்பது விசாரணையில்தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து காவல்துறைடிஜிபி சைலேந்திர பாபுவின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பான வழக்கைசிபிசிஐடிக்குமாற்றி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்துஇந்த சம்பவம் தொடர்பான வழக்கு ஆவணங்களைபரமக்குடிமகளிர் காவல் நிலைய போலீசார் சிபிசிஐடியிடம் ஒப்படைத்தனர். தற்போது சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை விசாரிக்க தொடங்கிஉள்ளனர்.
Follow Us