Skip to main content

குப்பைக் கிடங்காக மாறும் புகழ்பெற்ற குளம்; கண்டுகொள்ளாத ஊராட்சி நிர்வாகம்!

Published on 29/11/2019 | Edited on 29/11/2019

தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் ஊராட்சிக்கு உட்பட்ட பந்தநல்லூர் நகரத்தின் நடுவே அமைந்துள்ளது  புகழ்மிக்க செட்டிக்குளம். எட்டு ஏக்கர் சுற்றளவு உள்ள இந்த குளம், நகரத்தின் பெருமையையும், நீர் ஆதாரத்தையும் காத்து வந்தது. கடந்த சில ஆண்டுகளாக தண்ணீர் பற்றாக்குறையால் குளம் வறண்டு கிடந்தது.

 

Pool

 

இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பந்தநல்லூர் ஊராட்சி நிர்வாகத்தினரும், வர்த்தக நிறுவனத்தினரும், நகரத்தின் கழிவுகள் குப்பைகள், ஐந்து திருமண மண்டபங்களின் கழிவுப்பொருட்கள், 11 இறைச்சி கடைகளின் கழிவுகள் என அனைத்தையும் கொண்டு வந்து குளத்தை சுற்றி கொட்டி நாசம் செய்தனர். இதனால் அப்பகுதியில் துரநாற்றம் வீசுவதோடு கொசு, ஈக்கள் அதிகமாகிவிட்டன.

இதைக்கண்டித்து இரண்டுமாதங்களுக்கு முன்பு சமூக ஆர்வளர்கள், ஐம்பதுக்கும் மேற்பட்டோர் பந்தநல்லூரைச் சேர்ந்த முருகப்பன் தலைமையில் திரண்டுவந்து குளத்தின் கரையில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் எந்த பயனும் ஏற்படவில்லை. குப்பை கொட்டுவதை யாரும் நிறுத்தவில்லை.

இது குறித்து சமூக ஆர்வளர் த.முருகப்பன் கூறுகையில், " குப்பைக் கழிவுகள் அனைத்தும் செட்டிக்குளத்தைச் சுற்றி கொட்டப்படுகிறது. இது குறித்து நாங்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால் ஊராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் அதை பொருட்படுத்தவே இல்லை. இதற்கு பிறகும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மக்களை திரட்டி வந்து ஆர்பாட்டத்தில் ஈடுபடுவோம்" என்று காட்டமாக தெரிவித்தார்.

பந்தநல்லூர் பகுதியில் நான்கு பேருக்கு டெங்கு காய்ச்சல் இருந்து கண்டுபிடிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டதில்  இருவர் உயிரிழந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்

Next Story

கோவில் குளத்தில் மூழ்கிய நபர்; சோகத்தை ஏற்படுத்திய மனைவியின் செயல்

Published on 04/02/2024 | Edited on 04/02/2024
A person drowned in a temple pool; The action of the wife that caused the tragedy

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் கோவில் குளத்தில் குளிக்க சென்ற நபர் வழுக்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் இளமையாக்கினார் கோவில் பகுதியில் குளம் ஒன்று உள்ளது. இந்த பகுதியில் நபர் ஒருவர் குளிக்க சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது தவறி விழுந்த அவர் மூழ்கி போனார். இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக வந்தது தீயணைப்புத்துறையினர் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக தேடி உடலை கண்டுபிடித்தனர்.

உயிரிழந்த நபரின் மனைவிக்கு இது குறித்து தகவல் அளிக்கப்பட்டது. அங்கு வந்த அந்த நபரின் மனைவி கண்ணீர் விட்டு அழுததோடு சிபிஆர் சிகிச்சை அளிப்பதுபோல அவசர சிகிச்சைகளை மேற்கொண்டார். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார். எப்படியும் கணவரை காப்பாற்றிவிடலாம் என அனைவர் முன்னும் அப்பெண் கதறி அழுதபடி அவருடைய மார்பு பகுதியை அழுத்தி சிபிஆர் சிகிச்சை கொடுத்தது அங்கு சோகத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் அங்கு சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Next Story

காப்பாற்ற முயன்று குளத்தில் மூழ்கிய 3 சகோதரிகள்; சோகத்தில் கிராமம்

Published on 01/09/2023 | Edited on 01/09/2023

 

 3 sisters who drowned in the pond while trying to save; A sad village

 

கேரளாவில் மூன்று சகோதரிகள் அடுத்தடுத்து குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

 

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ளது மன்னார்காடு. இதனருகே உள்ள கோட்டோ பாடம் என்ற ஒரு சிறு கிராமம். இந்த கிராமத்தில் வசித்து வந்த சகோதரிகள் நஷிதா(26),  ரம்ஷீனா(23), ரம்ஷி(18) ஆகியோர் அங்குள்ள குளம் ஒன்றில் குளிக்கச் சென்றனர். அப்பொழுது மூன்று பேரில் ஒருவர் ஆழமான பகுதிக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.

 

இதைக் கண்ட மற்ற இரு சகோதரிகள் அவரை மீட்பதற்காக முயன்றுள்ளனர். ஆனால் முயற்சி பலனளிக்காமல் மூன்று பேருமே அதே குளத்தில் மூழ்கி உயிரிழந்தனர். நீண்ட நேரமாக குளத்தின் கரையில் உடைகள் கிடப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் சந்தேகமடைந்து மீட்புப் படையினருக்குத் தகவல் கொடுத்தனர். அப்பொழுது 3 சகோதரிகளும் நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது. மூன்று பேரின் உடல்களும் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டது. மூன்று சகோதரிகள் ஒரே நேரத்தில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.