Skip to main content

”மக்களுக்கு வாரி வழங்கும் வள்ளலாக இருக்கிறார் முதல்வர்” - அமைச்சர் ஐ.பெரியசாமி

Published on 03/08/2022 | Edited on 03/08/2022

 

Panchayat Union Office Building in Dindigul attur

 

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் நிலக்கோட்டை தொகுதியில் செம்பட்டியில் செயல்பட்டு வந்தது. ஆத்தூர் தொகுதி மக்கள் நீண்ட நாட்களாக தங்கள் தொகுதியில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் வேண்டும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் கோரிக்கை வைத்துவந்தனர். இந்நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை அமைச்சர் ஐ.பெரியசாமி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் எடுத்து சென்றார். இதையடுத்து தமிழக முதல்வர், ரூ.3 கோடியே 45 இலட்சம் ஒதுக்கீடு செய்தார். அதனைத் தொடர்ந்து புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டும் பனிக்கான பூமி பூஜை ஆத்தூர் ஊராட்சிக்குட்பட்ட கோழிப்பண்ணை பிரிவில் நடைபெற்றது. விழாவிற்கு ஒன்றிய பெருந்தலைவர் மகேஸ்வரி முருகேசன் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பாஸ்கரன், ஊராட்சி மன்றத்தலைவர் ஐ.ஜம்ரூத்பேகம், ஒன்றிய துணைப் பெருந்தலைவர் ஹேமலதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் தட்சிணாமூர்த்தி வரவேற்றுப் பேசினார். 

 

விழாவில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, “தமிழக மக்கள் நலனுக்காக அயராது பாடுபடும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆத்தூர் தொகுதி மக்களுக்கு வாரி வழங்கும் வள்ளலாக உள்ளார். தொகுதி மக்கள் நலன் கருதி நான் விடுக்கும் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி வருவதோடு வருங்கால தொலைநோக்கு திட்டங்களுக்கும் முக்கியத்துவம் அளித்து நிதி ஒதுக்கீடு செய்து வருகிறார். குறிப்பாக தமிழகத்திலேயே கூட்டுறவுத்துறை சார்பாகக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆத்தூர் தொகுதியில் அமையவும், ரெட்டியார் சத்திரம் பகுதியில் அரசு கலைக்கல்லூரி கொண்டு வரவும் உத்தரவிட்டார். இதன்மூலம் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயன்பெறுகிறார்கள். 

 

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியுடன் நிற்காமல் அக்கல்லூரியில் இன்னும் சில வகுப்புகள் சேர்க்கப்பட உள்ளன. இதன்மூலமும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயன்பெறுவார்கள். 1965ம் ஆண்டு சித்தையன்கோட்டை மணிசெட்டியார் தி.மு.க. சார்பாக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இன்றுவரை 57 வருடங்களாக ஆத்தூர் தொகுதி தி.மு.க.வின் கோட்டையாக உள்ளது. ஆத்தூர் தொகுதி மக்களின் நலன் கருதி தாலுகா அலுவலகம், நீதிமன்றம், தீயணைப்பு நிலையம், பொறியியல் கல்லூரி, அரசு கலைக்கல்லூரி இப்போது புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் உட்பட எண்ணற்ற நலத்திட்டங்கள் மக்கள் நலனுக்காக செயல்படுத்தப்பட்டுள்ளன. இப்பகுதியில் போக்குவரத்துக் கழகம் சார்பாக பணிமனை அமைய நடவடிக்கை எடுத்து வரப்படுகிறது. இதன்மூலம் போக்குவரத்து வசதியும் எளிதாகும். ஏழை எளிய மாணவர்கள் குறிப்பாக மாணவியர்கள் தங்கள் வீட்டின் முன்பு இலவசமாக அரசு பேருந்தில் பயணம் செய்து கல்லூரி வாசலில் இறங்கிப் படிக்கும் அளவிற்குப் போக்குவரத்து வசதி ஆத்தூர் தொகுதியில் எளிதாக்கப்படும்” என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'குறைந்தது 15 ஆயிரம் பேருக்கு மேல் கூட்டம் இருக்கணும்' - கட்டளையிட்ட த.மோ. அன்பரசன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக வாக்கு சேகரிக்க களத்தில் இறங்கியுள்ளது. இந்த நிலையில், செங்கல்பட்டில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேசுகையில், “நம்ம வேட்பாளர் வாராரு, மாவட்டச் செயலாளர்  வாராரு, எம்.எல்.ஏ வாராருன்னு வீட்டுக்கு வீடு தேங்காய் வாங்கி கொடுத்து விடுவார்கள். வீட்டுக்கு வீடு ஒரு சால்வை வாங்கி கொடுத்து விடுவார்கள். நான் கூட்டிட்டு வருவேன் நீங்கள் சால்வை போடுங்கள் என்று சொல்வார்கள். அப்படியெல்லாம் செய்தீர்கள் என்றால் டைம் வேஸ்ட். மத்த ஊருக்கு போவதெல்லாம் கெட்டுப் போய்விடும். அதேபோல் ஜீப் வருகிறது என்றால் இப்பொழுது வைத்தார்களே பட்டாசு அது மாதிரி பட்டாசு வைப்பார்கள். அது ஒரு அரை மணி நேரத்திற்கு வெடிக்கும். அதனால் ஊரே காலி ஆகிவிடும். தயவு செய்து சொல்கிறேன், பட்டாசு யாராவது வைத்தார்கள் என்றால் நிச்சயமாக கட்சியில் இருந்து எடுத்து விடுவார்கள். ஜாக்கிரதை கண்டிப்பாக சொல்கிறேன். சிரிக்கிறதுக்கு சொல்லவில்லை உண்மையாகவே சொல்கிறேன்.

நான் பலமுறை சொல்லிவிட்டேன். இந்த மாதிரி பட்டாசு வெடிக்காதீங்க என்று. இரவு 10 மணியோடு பிரச்சாரத்தை முடிக்கணும். நாளை மாலை நம்முடைய இளைஞர் அணி செயலாளர், விளையாட்டுத் துறை அமைச்சர் ஆலந்தூர் தொகுதியில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு பல்லாவரம் தொகுதிக்கு வருகிறார். அதனால் மிகப்பெரிய அளவில் மிகப்பெரிய கூட்டத்தை நாம் காட்டியாக வேண்டும். கூட்டணி கட்சித் தோழர்களும் அதிக அளவில் வரவேண்டும். நம்ம தோழர்களும் அதிக அளவில் வரவேண்டும். குறைந்தது 15 ஆயிரம் பேருக்கு மேல் அங்கு கூட்டம் இருக்கணும். பக்கத்திலேயே நாளைக்கு எடப்பாடி பழனிசாமி கூட்டம் நடைபெறுகிறது. அந்தக் கூட்டம் பிசுபிசுத்து போய்விட வேண்டும். நம்ம கூட்டம் தான் மிகப்பெரிய கூட்டம் என்பதை அதிமுககாரங்க உணரணும். நம்ம கதை முடிஞ்சு போச்சு என நாளைக்கே அவங்க முடிவு பண்ணனும்.

இங்கு காங்கிரஸ் மாவட்ட தலைவர் பேசும்போது சொன்னார், எங்கு வீக்கா இருக்குதோ அங்குதான் கவனம் செலுத்த வேண்டும் என்று. அங்கெல்லாம் கவனம் செலுத்த வேண்டியது இல்லை. எங்கு நல்லா இருக்குதோ அங்கதான் கவனம் செலுத்தணும். நீ அங்கு போய் ஓட்டு போடாதவன் கிட்ட போயிட்டு எத்தனை வாட்டி போய் கேட்டாலும் ஓட்டு போட மாட்டான். நம்ம ஆளு எங்க நல்லா இருக்கானோ அவன் கால்ல போய் விழு. அவன் ஓட்டு போடுவான். இது நம்ம தந்திரம் கற்றுக்கொள். இது எங்க வேலை. ஓட்டு போடாதவங்க கிட்ட நீ போய் தொங்கிக்கிட்டு இருக்க வேண்டிய அவசியமில்லை. என்னதான் கால்ல விழுந்தாலும் ஓட்டு போட மாட்டான். நம்ம ஆளு ஓட்டு போடுறவன் இருக்கிறான். அவர்கள் கிட்ட போய் ஓட்டு கேளுங்க. டைம் வேஸ்ட் பண்ணாதீங்க'' என்றார்.

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.