Advertisment

மன்னார்குடியில் ஊராட்சி செயலாளர்கள் ரத்தக் கையெழுத்து போராட்டம்

bl

Advertisment

திருவாரூரில் ஊதிய ஊயர்வு வழங்க வலியுறுத்தி ரத்தக் கையெழுத்திட்டு ஊராட்சி செயலாளர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாருர் ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழக அரசு ஏற்றுக் கொண்ட ஊராட்சி செயலாளர்களுக்கு பதிவுறு எழுத்தர்களுக்கு இணையான ஊதியம் வழங்குவதற்கான அரசாணையை வெளியிட வலியுறுத்தி ரத்தக் கையெழுத்திட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

bl

Advertisment

போராட்டத்தில் ஒரு லட்சம் ஊராட்சி செயலரிடம் ரத்தக் கையெழுத்து பெற்று தமிழக முதல்வர், துணை முதல்வர், இயக்குனர், அரசு கூடுதல் தலைமைச்செயலாளருக்கு கோரிக்கைகளை வலியுறுத்தி கடிதம் அனுப்பவுள்ளதாக வலியுறுத்தப்பட்டது. ஊரக வளர்ச்சித் துறை மாவட்ட தலைவர் சுந்தரலிங்கம் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Blood
இதையும் படியுங்கள்
Subscribe