Skip to main content

மன்னார்குடியில் ஊராட்சி செயலாளர்கள் ரத்தக் கையெழுத்து போராட்டம்

Published on 01/10/2018 | Edited on 01/10/2018
bl

 

திருவாரூரில் ஊதிய ஊயர்வு வழங்க வலியுறுத்தி ரத்தக் கையெழுத்திட்டு ஊராட்சி செயலாளர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

திருவாருர் ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழக அரசு ஏற்றுக் கொண்ட ஊராட்சி செயலாளர்களுக்கு பதிவுறு  எழுத்தர்களுக்கு இணையான ஊதியம் வழங்குவதற்கான அரசாணையை வெளியிட வலியுறுத்தி ரத்தக் கையெழுத்திட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

 

bl

 

போராட்டத்தில் ஒரு லட்சம் ஊராட்சி செயலரிடம் ரத்தக் கையெழுத்து பெற்று தமிழக முதல்வர், துணை முதல்வர், இயக்குனர், அரசு கூடுதல் தலைமைச்செயலாளருக்கு கோரிக்கைகளை வலியுறுத்தி கடிதம் அனுப்பவுள்ளதாக வலியுறுத்தப்பட்டது. ஊரக வளர்ச்சித் துறை மாவட்ட தலைவர் சுந்தரலிங்கம் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில்  கோரிக்கைகளை வலியுறுத்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரத்த பிளேட்லெட்க்கு பதிலாக சாத்துக்குடி ஜூஸ்-தனியார் மருத்துவமனைக்கு சீல்

Published on 21/10/2022 | Edited on 21/10/2022

 

 Chathukudi Juice-Private Hospital Seal for Blood Platelet Replacement

 

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவருக்கு ரத்த பிளேட்லெட்க்கு பதிலாக பழச்சாறு ஏற்றியதாக தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு சீல் வைக்கப்பட்ட சம்பவம் உத்திர பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.

 

உத்திரபிரதேச மாநிலம் ப்ரயாக்ராஜில் டெங்குகாய்ச்சலால் பாதிக்கப்பட்ட  32 வயது மதிக்கத்தக்க ஒருவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ரத்தத்தில் பிளேட்லெட் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் அதனால் அவருக்கு உடனடியாக பிளேட்லெட் செலுத்த வேண்டும் எனவும் அந்த மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

 Chathukudi Juice-Private Hospital Seal for Blood Platelet Replacement

 

அதனைத் தொடர்ந்து நோயாளிக்கு பிளேட்லெட் ஏற்றப்பட்டது. பின்னர் வேறு ஒரு மருத்துவமனைக்கு அந்த நபர் மாற்றப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி  அவர் உயிரிழந்தார்.  பிளேட்லெட்க்கு பதிலாக சாத்துக்குடி ஜூஸை ஏற்றியதாக உயிரிழந்தவரின் உறவினர்கள் வீடியோ வெளியிட்ட நிலையில்,  துணை முதல்வரின் உத்தரவின் பேரில் அங்கு வந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த மருத்துவமனைக்கு சீல் வைத்து விட்டு சென்றனர்.

 

 

Next Story

வெட்டியது யார் ? வெட்டுப்பட்டது யார் ?குழப்பத்தில் போலிஸார்

Published on 02/09/2019 | Edited on 02/09/2019

 

திருவண்ணாமலை நகரில் கிரிவலப்பாதையில் பொதுப்பணித்துறை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் நுழைவாயிலில் நின்றிருந்த ஒருவரை ஒரு கும்பல் அருவா மற்றும் கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளது. 

 

ப்

 

இதனைப்பார்த்து அங்கிருந்த கடைக்காரர்களும், அந்த வழியாக சென்ற பொதுமக்களும் பார்த்து அதிர்ச்சியாகியுள்ளனர். 

 

வெட்டி கொலை செய்யப்பட்டவரின் உடல், ரத்த வெள்ளத்தில் கிடந்ததை ஒரு கும்பல் காரில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளது. இதுதொடர்பாக இதுவரை யாரும் புகார் செய்யவில்லை எனக்கூறப்படுகிறது. 

 

இந்த தகவல் தெரிந்த திருவண்ணாமலை நகர காவல்துறை அதிர்ச்சி அடைந்துள்ளது. வெட்டப்பட்டது யார், வெட்டியது எந்த கும்பல், எதற்காக வெட்டியது என சம்பவயிடத்துக்கு வந்த காவல்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

இந்த விவகாரம் திருவண்ணாமலை நகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.