Skip to main content

புயலில் விழுந்ததாக நல்ல மரங்களை வெட்டிய ஊராட்சிப் பணியாளர்கள்? - பொதுமக்கள் குற்றச்சாட்டு!

Published on 05/12/2020 | Edited on 05/12/2020

 

The panchayat persons  who cut down the good trees that fell in the storm? Public indictment

 

‘நிவர்’ புயல் வடதமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களின் பயிர்கள் அழிந்துள்ளன. அதேபோல் ஏராளமான மரங்கள் புயல் காற்றில் வேரோடு கீழே விழுந்துள்ளன. புயல் மழையால் மரங்கள், மின்கம்பங்கள், வீடுகள் இடிந்துவிழுதல் போன்றவற்றை மாவட்ட நிர்வாகத்துக்குத் தெரியப்படுத்த வேண்டுமென வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, மின்வாரியம் போன்றவற்றுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படியே இழப்பு கணக்கெடுப்பு செய்யப்பட்டன. மாவட்ட ஆட்சித்தலைவரின் அந்த உத்தரவின்படி ஊரக வளர்ச்சித்துறை நடந்துகொள்ளவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


வேலூர் ஊராட்சி ஒன்றியம் பெருமுகை ஊராட்சியில் பிள்ளையார்குப்பம் என்கிற பகுதியில் நூற்றுக் கணக்கான தைலமரம் வளர்ந்திருந்தன. சமீபத்திய புயலில் அதில் 50க்கும் அதிகமான மரங்கள் வேரோடு கீழே விழுந்துள்ளன. கீழே விழுந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்திய அதேநேரத்தில், நன்றாக இருந்த மரங்களையும் வெட்டியுள்ளனர், அந்த ஊராட்சியைச் சேர்ந்த ஊராட்சி அதிகாரிகள் எனக் குற்றம் சாட்டுகின்றனர் அப்பகுதி மக்கள்.
 

The panchayat persons  who cut down the good trees that fell in the storm? Public indictment


50 அடி, 70 அடி உயரமுள்ள மரங்களை வெட்டி, துண்டு துண்டாக்கிப் போட்டுள்ளனர். இந்த மரங்கள் இப்படிக் கீழே விழக் காரணம், இந்தப் பகுதியில் ஆளும்கட்சி அரசியல் பிரமுகர்கள், செம்மண், மொரம்பு மண்களைச் சட்டவிரோதமாக அள்ளி விற்பனை செய்தனர். இவை மரங்கள் இருந்த பகுதியில் நடந்ததால், மரங்களுக்குப் பிடிப்பு இல்லாமல் தற்போது வீசிய புயல் காற்றில் விழுந்துவிட்டன. விழுந்த மரங்கள் குறைவுதான் அதைவிட அதிகமாக, நன்றாக இருந்த மரங்களை வெட்டிப்போட்டுள்ளனர். அதற்குக் காரணம், இங்குள்ள மண்ணை அள்ளவும், மலையை உடைத்து ஜல்லி தயாரிக்கவும், இதுபோல் செய்துள்ளார்கள் என்றார்கள் அப்பகுதி சமூக ஆர்வலர்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கதிர் ஆனந்த் வேட்புமனு தாக்கல் 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Kathir Anand filed nomination

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். இதற்காக அவர், அமைச்சர் துரைமுருகன், சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார், சட்டமன்ற உறுப்பினர் கார்த்தி உள்ளிட்ட 2000க்கும் மேற்பட்ட இந்தியா கூட்டணிக் கட்சித் தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்து மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலர் சுப்புலட்சுமியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

அதற்கு முன்னதாக வேலூர் அண்ணா சாலையில் உள்ள வேலூர் மாநகர் திமுக அலுவலகத்தில் கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, தொடர்ச்சியாக ஊர்வலமாகச் சென்று அண்ணா சிலை, பெரியார் சிலை, காந்தி சிலை, அம்பேத்கர் சிலை ஆகியவற்றிற்கு மாலை அணிவித்துவிட்டு சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்து தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.

அதற்கு முன்னதாக இந்தியா கூட்டணி தொண்டர்கள் ஆரவாரத்துடன் கதிர் ஆனந்த் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். வழிநெடுக பட்டாசுகள் வெடித்து கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் எனப் பல்வேறு மேள தளங்கள் இசைத்து ஊர்வலமாக வந்தனர். பின்னர் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான சுப்புலட்சுமியிடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.