Skip to main content

அதிமுக பிரமுகருக்கு 4 ஆண்டுகள் சிறை!

Published on 04/03/2021 | Edited on 04/03/2021

 

Panchayat leader jailed in his 52 years for taking bribe in before 6years

 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ளது தேவதானம்பேட்டை கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் அதிமுக பிரமுகரான 52 வயது ஆறுமுகம். இவர் 2011 - 2016ஆம் ஆண்டுகளின் காலகட்டத்தில் அந்த கிராமத்தின் ஊராட்சி மன்றத் தலைவராக வெற்றி பெற்று பதவி வகித்து வந்துள்ளார்.

 

அதே ஊரைச் சேர்ந்த பச்சையப்பன் மனைவி சுதா என்பவருக்கு அரசு சார்பில் இந்திராகாந்தி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் அதிகாரிகளால் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் சார்பில் சுதாவிடம் வழங்கியுள்ளனர். அரசு சார்பில் தமக்கு வீடு கிடைக்கப் போகிறது என்று சந்தோஷத்தில் சுதா இருந்துள்ளார். ஆனால் இந்த திட்டத்தில், பயனாளிகளுக்கு முதல் தவணையாக 59 ஆயிரத்து 541 ரூபாய்க்கான காசோலையை (சுதாவிடம்) வழங்குவதற்கு ஊராட்சி மன்றத் தலைவர் ஆறுமுகத்திற்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

 

ஆனால், ஊராட்சி மன்றத் தலைவர் சுதாவிடம், தமக்கு 10 ஆயிரம் ரூபாய் லஞ்சமாகக் கொடுத்தால்தான் அரசு ஒதுக்கீடு செய்துள்ள வீடு கிடைக்கும் என்று ஆறுமுகம் கூறியுள்ளார். அரசு ஒதுக்கீடு செய்துள்ள வீட்டிற்கு இவருக்கு எதற்கு லஞ்சம் கொடுக்க வேண்டும் என நினைத்த சுதா, இதுகுறித்து விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரையடுத்து கடந்த 21.08.2014 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் ஆலோசனையின் பேரில், ரசாயனம் தடவிய பத்தாயிரம் ரூபாயை சுதாவிடம் கொடுத்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், அதை ஊராட்சி மன்றத் தலைவர் ஆறுமுகத்திடம் கொடுக்குமாறு கூறியுள்ளனர்.

 

அதேபோன்று அந்தப் பணத்தைக் கொண்டு சென்று ஊராட்சி மன்றத் தலைவர் ஆறுமுகத்திடம் சுதா கொடுத்துள்ளார். அப்போது, லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கையும் களவுமாக ஊராட்சி மன்றத் தலைவர் ஆறுமுகத்தைப் பிடித்து வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்தனர். இது சம்பந்தமான வழக்கு விழுப்புரம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது. இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி மோகன் நேற்று தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில், அரசு ஒதுக்கீடு செய்த இலவச வீட்டிற்கு லஞ்சம் பெற்ற குற்றத்திற்காக ஊராட்சி மன்றத் தலைவர் ஆறுமுகத்திற்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

 

இதையடுத்து, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஆறுமுகத்தை நீதிமன்றத்தில் இருந்தபடியே கடலூர் மத்திய சிறைக்குக் கொண்டு சென்று அடைத்துள்ளனர். இதேபோன்று பல ஊராட்சிமன்றத் தலைவர்கள் லஞ்சமாகப் பணம் கொடுத்தால்தான் ஊராட்சிகளில் அரசு சார்பில் வழங்கப்படும் சலுகைகள் கிடைக்கும் என்றும் இல்லையென்றால் அரசு சலுகைகள் கிடைக்காது என்றும் கூறி வருகின்றனர். இது குறித்து, நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் ஊராட்சி மன்றத் தலைவர்கள் மீதான புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாமியாரை துடிதுடிக்க கொன்ற மருமகன்; சென்னையில் பயங்கரம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Son-in-law incident mother-in-law in Chennai

சென்னை மாதவரம் கண்ணன் நகரில் வசித்து வருபவர்கள் புஷ்பராஜ் - ஜான்சி தம்பதியினர் புஷ்பராஜ் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். மனைவி ஜான்சி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர்களுடன் ஜான்சியின் தாய் வசந்தியும் வசித்து வந்துள்ளார். புஷ்பராஜ் தினமும் மது அருந்திவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்ததால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு புஷ்பராஜ் மீண்டும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததால் மனைவி ஜான்சியுடன் வாக்குவாம் ஏற்பட்டுள்ளது. மாமியார் வசந்தி தங்களுடன் வசித்து வருத்து வருவதால்தான் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவதாக கருதிய புஷ்பராஜ் மனைவி வெளியே சென்ற போது மாமியார் வசந்தியிடம் இதுகுறித்து தகராறு செய்துள்ளார்.

இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த புஷ்பராஜ் மாமியார் வசந்தியை கட்டையால் தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த வசந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார். இதையடுத்து புஷ்பராஜ் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வசந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த  புஷ்பராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

ரூ. 1 கோடி பறிமுதல்; ஊராட்சித் தலைவர் மீது வழக்குப்பதிவு!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Rs. 1 crore confiscation; Case registered against panchayat chairman

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், திருச்சி மாவட்டம் மாவட்டம் எட்டரை ஊராட்சி மன்றத் தலைவர் திவ்யா வீட்டில் ரூ.1 கோடி நேற்று (12.04.2024) தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. கைப்பற்றப்பட்ட ரூ.1 கோடி தொடர்பாக வருமான வரித்துறை விசாரித்து வந்தனர். அதனைத் தொடர்ந்து திவ்யா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.1 கோடி யார் மூலம் வந்தது என தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. எட்டரை ஊராட்சி மன்றத் தலைவர் திவ்யா அதிமுகவைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.