Skip to main content

திருச்சி ஆவின்சேர்மன் பதவி;முதல்வர் எடப்பாடி நடத்திய பஞ்சாயத்து!

Published on 27/02/2020 | Edited on 27/02/2020

கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் ஆவின் கூட்டுறவு சங்கங்களுக்கு நிர்வாகக்குழு உறுப்பினருக்கான தேர்தல் நடத்தப்பட்டு புதிய சேர்மங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தமிழகம் முழுவதும் ஒருங்கிணைந்த மாவட்டங்களாக இருந்த ஆவின் சேர்மன் பதவிக்கு 2 மாவட்டமாக பிரித்து பதவி வழங்கியிருந்தனர்.

இந்த நிலையில் குழப்பத்திலும் இருந்த பிரிக்கப்பட்ட 14 சேர்மன் பதவிகள் உள்ளிட்ட கமிட்டியை கலைத்துவிட்டு புதிய தேர்தல் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையம் மூலம், 14 மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியங்களுக்கு (ஆவின்) தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 Panchayat held by Edappadi, chief minister in Trichy


திருச்சி பொருத்தவரையில் வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி தேதி பிப்ரவரி 27, வேட்புமனு பரிசீலனை பிப்ரவரி 28, வேட்பாளர் இறுதிப் பட்டியல் பிப்ரவரி 29.வாக்குப்பதிவு நடைபெறும் நாள் மார்ச் 4 தேர்தல் முடிவு அறிவிக்கும் நாள் மார்ச் 5 என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. திருச்சி ஆவின் சேர்மன் பதவிக்கு திருச்சி ,முசிறி ,மணப்பாறை ,துறையூர், பெரம்பலூர்,வேப்பந்தட்டை ,அரியலூர், ஜெயங்கொண்டம். ஒன்பது தொகுதிகளில் இருந்து 17 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்கிறார்கள்.

திருச்சி ஆவின் சேர்மன் கார்த்திகேயன் பதவி ஏற்று ஒரு வருடம் முடிவதற்குள்ளாகவே கலைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. திருச்சியை பொருத்தவரை முதல்வர் எடப்பாடியின் நிழல் என்கிற அதிகாரத்தோடு எந்தவித நடைமுறையும் பின்பற்றாமல் கடந்த ஆவின் சேர்மன் ஆனார் கார்த்திகேயன்.

கார்த்திகேயன் முதல்வர் பெயரை பயன்படுத்தி ஆவின் நிறுவனத்தில் ரிட்டையர்ட் ஆனவர்கள் பலன்களைப் பெற லஞ்சம் கேட்ட சர்ச்சை, ஆவினில் புதிதாக வேலைவாய்ப்புக்கு இலஞ்சம் புரளுகிறது, சினிமா கம்பெனி ஆரம்பித்ததும் அவர் பெயரைச் சொல்லி மிரட்டி படங்கள் டிஸ்ட்ரிபியூட்டர் பிரச்சனை அமைச்சர்கள் மாவட்ட செயலாளர்கள் என யாரையும் மதிக்காமல் தனி அணியாக செயல்பட்டு திருச்சி அதிமுகவில் தனி அணி ராஜ்ஜியம் நடத்துகிறார் முதல்வர் எடப்பாடி போன்று சட்டை அணிவதும், அவர் தைக்கும் கடைகளிலே இவர் துணி தைப்பதும், எடப்பாடி போன்றே கை சட்டையை மடித்து விடுவதும், கையில் கலர் கலராய் கயிறு அணிவதும் அவர் பயன்படுத்தும் காரை போன்று இவர் பயன்படுத்துவதும், அனைத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் முதல்வரின் பிரதிநிதி என காரியங்களை சாதித்துக் கொள்கிறார் என உளவுத்துறை ஆட்சித் தலைமைக்கு விரிவான ரிப்போர்ட் அனுப்பியது.

அதே நேரத்தில் சமீபத்தில் ஓபிஎஸ் ஈபிஎஸ் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் ஆவின் கார்த்திகேயன் மீது அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மாவட்ட செயலாளர் குமார் ஆகியோர் கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்தனர்.

 

 Panchayat held by Edappadi, chief minister in Trichy

 

தற்போது மீண்டும் ஆவின் சேர்மன் பதவிக்கு கார்த்திகேயன் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது தான் தற்போது கட்சியினரிடையே விவாதப் பொருளாக மாறியுள்ளது. திருச்சியில் உள்ள சீனியர் நிர்வாகிகள் மோதி வருகிறார்கள். இந்த நிலையில் ஆவின் கார்த்திகேயன் தவிர்த்து மணப்பாறை செல்வராஜ் உள்ளிட்ட பலர் வேட்பு மனு தாக்கல் செய்ய ஆரம்பித்தனர்.

இந்த நிலையில் 26.02.2020 தஞ்சையில் வைத்தியலிங்கம் வீட்டு திருமணத்திற்கு வந்தவர் புதிதாக கட்டப்பட்டுவரும் முக்கொம்பு அணையை சுற்றி பார்த்தவர் திருச்சியில் இன்று மதியம் ஓய்வு எடுத்தார்.

இந்த ஓய்வு நேரத்தில் திருச்சியின் ஆவின் சேர்மன் யார் என்கிற பெரிய பஞ்சாயத்தே நடந்து இருக்கிறது. செல்போன் எல்லாம் அணைத்து வைக்கப்பட்ட நிலையில் மதியம் 2.30 மணிக்கு வந்த பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜியுடன் பேச்சு வார்த்தை நடந்து உள்ளது. இதில் ஆவின் கார்த்திகேயனுக்கு ஆதரவாக மா.செ. ரத்தினவேல், அமைச்சர் வளர்மதி மற்றும் தாமரை ராஜேந்திரன் ஆகியோர் கார்த்திகேயனுக்கு மீண்டும் கொடுங்கள் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்று சொல்லியிருக்கிறார்கள்.

அதே நேரத்தில் மா.செ. குமார், அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், பெரம்பலூர் ஆர்.டி.ஆர் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். இதில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அவன் யாரையும் மதிப்பதில்லை உள்ளாட்சி தேர்தலில் பெரிய குழப்பம் வரும், கட்சியினர் எல்லோரும் குற்றம் சாட்டின பின்பு மீண்டும் அவனுக்கு பதவி கொடுத்தால் எப்படி அரசியல் செய்வது என்று கடுமையான எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்.

 

 Panchayat held by Edappadi, chief minister in Trichy

 

உடனே இடையில் குறுக்கீட்ட முதல்வர் எடப்பாடி அடுத்து மாநகராட்சி உள்ளாட்சி தேர்தல் வருது. திமுக போட்டியிடும் பெரிய சவலாக இருக்கும். இந்த நேரத்தில் கோஷ்டி பூசல் இருந்தால் பெரிய பிரச்சனையாக இருக்கும். நான் கார்த்திகேயனை கூப்பிட்டு கண்டிக்கிறேன். இந்த ஒரு முறை விடுங்க அவரை வேட்பு மனு தாக்கல் செய்ய சொல்லுங்க என்று முதல் அனைவரையும் பஞ்சாயத்து செய்து அனுப்பியிருக்கிறார்.

எப்போதும் முதல்வர் எடப்பாடி திருச்சிக்கு வந்தால் கூடவே இருக்கும் ஆவின் கார்த்திகேயன் இன்று மிஸ்சிங்.  உடன் காணவில்லை. அதே நேரம் ஸ்ரீரங்கம் பகுதியில் அமைச்சர் வளர்மதி தலைமையில் கொடுத்த வரவேற்பு நிகழ்ச்சியில் இருந்தார்.

ஆவின் சேர்மன் பதவிக்கு வேட்புமனு கடைசிநாளில் கார்த்திகேயன் தாக்கல் செய்கிறார். மீண்டும் கார்த்திகேயன் ஆவின் சேர்மன் ஆவதற்கு கீரின் சிக்கல் கொடுத்து விட்டார் என்பதே இன்றைய பஞ்சாயத்தில் முடிவு என்கிறார்கள். கார்த்திக்கு மீண்டும் ஆவின் சேர்மன் பதவி கிடைப்பதால் ஏற்கனவே இருந்த கோஷ்டி பூசல் தீருமா , அல்லது தொடருமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஏற்கனவே ஆவின் சேர்மேனாக முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்த அயிலை பழனியாண்டி இருந்தார். அதன் பிறகு மீண்டும் முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்தவருக்கே அந்தப் பதவியை கொடுக்க வேண்டும் என்று கட்சியினர் முடிவு செய்தபோது, முதல்வரின் சிபாரிசுடன் கார்த்திகேயன் சேர்மேன் ஆனார். இந்த நிலையில் ஆவின் சேர்மேன் பதவி கலைக்கப்பட்டு, மீண்டும் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை தேர்ந்தெடுக்க வளர்மதியிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. ஆனால் வளர்மதியோ, முத்தரையர் சமூகத்தில் தகுந்த நபர் யாரும் இல்லை என்று மீண்டும் கார்த்திகேயனை தேர்வு செய்தார். இதனால் அதிருப்தியடைந்த முத்தரையர் கூட்டமைப்பினர், அந்த கூட்டமைப்பு தலைவர் ஆறுமுகம் தலைமையில், முத்தரையரை புறக்கணிக்க வேண்டாம் என்று அமைச்சர் வீட்டுக்கு சென்று மனு அளித்துள்ளனர். இந்த விவகாரம் திருச்சி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும்” - எடப்பாடி பழனிசாமி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Edappadi Palaniswami said Safe travel of passengers should be ensured

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்தப் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்தப் பேருந்தின் நடத்துநரின் இருக்கை கழன்று, அதில் அமர்ந்திருந்த நடத்துநர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துநரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்தப் பேருந்தில் வந்த பயணிகளை பின்னால் வந்த வேறொரு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர். ஓடும்பேருந்தில் இருக்கை கழன்று நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில், பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நேற்று திருச்சி நகரப் பேருந்து சென்று கொண்டிருக்கையில் ஒரு வளைவில் நடத்துநர் இருக்கையுடன் தூக்கி வெளியே விழுந்த சம்பவம் தமிழக மக்களிடம், குறிப்பாக அரசுப் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, ஒரு சில மாதங்களுக்கு முன்பு சென்னை மாநகரப் பேருந்தில் பயணம் செய்த பெண் பயணி ஒருவர் கீழே விழுந்து விபத்துக்குள்ளான நிகழ்வின்போதே இனியாவது அரசு பேருந்துகளை உரிய முறையில் பராமரிப்பு செய்து, அரசு பேருந்துகளில் பயணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்த நான் இந்த தி.மு.க அரசை வலியுறுத்தியிருந்தேன். ஆனால், மீண்டும் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் பொதுமக்களிடம் அரசு பேருந்து பற்றிய நம்பிக்கையை கேள்விக்குறியாக்கியுள்ளன.

எனவே, இனியாவது இந்தத் திமுக அரசு விழித்துக் கொண்டு, அரசு பேருந்துகளின் ஆயுட்காலத்தை முன்பிருந்தது போல் குறைத்து புதிய பேருந்துகள் வாங்கவும், இயங்கிக் கொண்டிருக்கும் பேருந்துகளை முறையாக பராமரிப்பு செய்து, பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யுமாறும் வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

'கட்டுனா அத்தப்  பொண்ணத்தான் காட்டுவேன்'- தாயைக் கொன்ற மகன்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
nn

மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள தாய் அறிவுறுத்திய நிலையில் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என அடம் பிடித்த மகன், தாயையே கொன்ற சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்திருக்கிறது.

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை வாசன் சிட்டியில் வசித்து வந்தவர்கள் லிங்கம், கொடிமலர் தம்பதி, இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் மகன் ராஜகுமாரனுக்கு (28) திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்தனர். ஆனால் நீண்ட நாட்களாகவே ராஜகுமாரன் அத்தைப் பெண்ணை திருமணம் செய்து வையுங்கள் என வீட்டில் உள்ளோரிடம் கேட்டுள்ளார். ராஜகுமாரனின் அத்தை வீட்டு தரப்போ 'எங்கள் பெண்ணை உங்களுக்கு கொடுக்க முடியாது' எனத் தெரிவித்து வந்துள்ளனர். இதனால் மாமன் மகளைத் திருமணம் செய்து கொள்ள ராஜகுமாரனின் பெற்றோர்கள் அவரிடம் தெரிவித்துள்ளனர்.

கட்டினால் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என வைராக்கியமாக இருந்த ராஜகுமாரன் விரக்தியில் தற்கொலை முயற்சி எடுத்துள்ளார். உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் அவரை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றினர். ஆனால் தொடர்ந்து மறுபடியும் அத்தை மகளைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என ராஜகுமாரன் கேட்டு வந்துள்ளார். நாளடைவில் இது பெற்றோருக்கும் ராஜகுமாரனுக்கும் இடையே தகராறு ஏற்படும் அளவிற்கு சென்றுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜகுமாரனின் தாய் கொடிமலர் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கிடந்துள்ளார் .வெளியில் சென்றிருந்த தந்தை லிங்கம் வீட்டுக்கு வந்து பார்த்து அதிர்ச்சிடைந்து, அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளார். உடனே மகன் ராஜகுமாரனும் வந்துள்ளார். தொடர்ந்து சிகிச்சையில் இருந்து கொடிமலர் உயிரிழந்தார். பிரேதப் பரிசோதனைக்கு பிறகு, இது தனக்கு தானே குத்திக்கொள்ளும் அளவிற்கான காயம் அல்ல, யாரோ ஒருவர் கொலை முயற்சியில் கத்தியால் குத்தியுள்ளனர். இவ்வளவு ஆழமாக தனக்குத் தானே குத்திக் கொள்ள முடியாது என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பொது, ராஜகுமாரன் அந்தக் கொலையை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அத்தை மகளை தனக்கு கட்டி வைக்க ஏற்பாடு செய்யாததால் ஆத்திரமடைந்த ராஜகுமாரன் சண்டையிட்டுள்ளார். தாய் கொடிமலர் மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள கூறியதால் தாயையே கத்தியால் குத்தி ராஜகுமாரன் கொலை செய்தது உறுதியானது. பின்னர் கைது செய்யப்பட்டுள்ள ராஜகுமாரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.