Skip to main content

குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கிவைத்த பஞ்சாயத்தார்... உறவினர்கள் சாலைமறியல்..!

Published on 06/01/2021 | Edited on 06/01/2021

 

Panchayat displaces family .. Relatives block road


திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த வடசேரி கிராமத்தில் ஹரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த மற்றொரு குடும்பத்தாருக்கும் இடையே இடம் தொடர்பாக தகராறு இருந்துவந்துள்ளது. இதற்காக, பஞ்சாயத்து நடந்துள்ளது. இந்தப் பஞ்சாயத்து அறிவித்த முடிவுக்கு ஹரி ஒத்துக்கொள்ளவில்லை.

 

இதனால், ஹரியின் குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். அவரது குடும்பத்தாரோடு ஊர் மக்கள் யாரும் பேசக்கூடாது என்று வீடு வீடாகச் சென்று சொல்லியுள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. 

 

கட்டப்பாஞ்சாயத்து செய்து தங்களை ஊரைவிட்டு ஒதுக்கிவைத்து அவமானப்படுத்துவதாகவும், மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும் பஞ்சாயத்து செய்தவர்கள் மீது உமராபாத் காவல் நிலையத்தில் புகார் தந்துள்ளனர். அந்தப் புகார் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

 

இதனால், காவல்துறையினரை கண்டித்து உமராபாத் பேருந்து நிறுத்தத்தில் அரசு பேருந்தை சிறைபிடித்து ஹரியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் தெரிந்து உள்ளுர் போலீஸார் வந்து அவர்களை கலைந்துசெல்ல அறிவுறுத்தியுள்ளனர். அப்போதும் அவர்கள் அசைந்துகொடுக்கவில்லை. உயர் அதிகாரிகளுக்கு தகவல் சென்றதன் அடிப்படையில், விசாரணை நடத்திவருகின்றனர் காவல்துறையினர். இதனால் கலைந்துசென்றனர்.

 

ஏற்கனவே, காதல் திருமணம் செய்துகொண்டவர்களை குடும்பத்தாரே ஏற்றுக்கொண்டபோது, அந்த பஞ்சாயத்தார் ஏற்றுக்கொள்ளாமல் அபராதம் விதித்ததோடு, அதைக் கட்டவில்லையென காலில் விழச்செய்து பிரச்சனை செய்தனர். பின்பு, கடன் பிரச்சனையில் கட்டப்பஞ்சாய்து செய்து ஊரை விட்டு ஒதுக்கிவைத்ததாக, கடந்த மூன்று மாதத்தில் மட்டும் திருப்பத்தூர் மாவட்டத்தில் பல கட்டப்பஞ்சாயத்து பிரச்சனைகள் மீது புகார் தந்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்காததால், தொடர்ந்து இதுபோல் கட்டப்பஞ்சாயத்து அராஜகங்கள் அதிகரித்தபடியே உள்ளன. 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

ஐ.டி. ரெய்டில் ரூ. 40 லட்சம் பறிமுதல்; திருப்பத்தூரில் பரபரப்பு!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
IT Raid Rs. 40 lakh forfeited; Busy in Tiruppathur

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

அதே சமயம் திருப்பத்தூர் மாவட்டம் திருநாதர் முதலியார் என்ற பகுதியைச் சேர்ந்த நவீன் என்பவர் போட்டோ ஸ்டுடியோ, ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவர் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜி. ரமேஷின் அக்காள் மருமகன் ஆவார். இத்தகைய சூழலில் தேர்தலில் வாக்களிக்க வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வது குறித்து வருமான வரித்துறையினருக்கு தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையினர் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து நவீன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார். அப்போது ரூ. 40 லட்சம் ரொக்கம் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் தேர்தலில் வாக்களிக்க வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததா என்ற கோணத்திலும் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  வருமான வரித்துறை சோத்னையின் மூலம்  ரூ. 40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் திருப்பத்தூர் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

மாற்றுத்திறனாளி சிறுவனை தனியார் பேருந்தில் ஏற்ற மறுத்த நடத்துநர்!

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
conductor refused to board the differently-abled son in the private bus

திருப்பத்தூர் மாவட்டம், விசமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் குப்தா. இவருடைய மனைவி வெண்ணிலா. இவர்களுக்கு 14 வயதில் மாற்றுத்திறனாளி மகன் உள்ளார். இவரை இன்று இவருடைய அம்மா வெண்ணிலா திருப்பத்தூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மீண்டும் விசமங்கலத்தில் உள்ள வீட்டிற்குச் செல்வதற்காக திருவண்ணாமலை செல்லும் தனியார் பேருந்தில் மாற்றுத்திறனாளியான மகனை ஏற்றி சீட்டில் உட்கார வைத்துள்ளார். அப்போது மாற்றுத்திறனாளி மகனைத் தனியார் பேருந்தின் நடத்துநர் கீழே இறக்கி விட்டுள்ளார். 

ஆத்திரம் அடைந்த அவரின் தாயார் வெண்ணிலா மற்றொரு பேருந்தில் விசமங்கலம் பகுதிக்கு வந்து சாலையில் கல்லை வைத்து கையில் பெட்ரோல் கேனுடன் திருப்பத்தூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டார்.

conductor refused to board the differently-abled son in the private bus

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பத்தூர் கிராமிய போலீசார், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய ஆய்வாளர் ரேகா மதி நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதால் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.